தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
From Wikipedia, the free encyclopedia
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (People’s Liberation Organization of Tamil Eelam PLOT, புளொட்) என்பது முன்னாள் ஈழப் போராளி இயக்கங்களில் ஒன்றாகும். இது பின்னர் இலங்கை அரசுக்கு ஆதரவான துணை-இராணுவக் குழுவாக இயங்கியது. இவ்வியக்கம் தற்போது சனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியாக இயங்குகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்து பின்னர் பிரிந்து சென்ற உமாமகேசுவரனால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் இன்றைய தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆவார்.
விரைவான உண்மைகள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தலைவர் ...
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் | |
---|---|
People's Liberation Organisation of Tamil Eelam | |
தலைவர் | தர்மலிங்கம் சித்தார்த்தன் |
நிறுவனர் | க. உமாமகேஸ்வரன் |
தொடக்கம் | 1980 |
பிரிவு | தமிழீழ விடுதலைப் புலிகள் |
தலைமையகம் | 16 எயிக் வீதி, பம்பலப்பிட்டி, கொழும்பு |
தேர்தல் சின்னம் | |
நங்கூரம் | |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
plote.org | |
இலங்கை அரசியல் |
மூடு