தாத்ரா மற்றும் நகர் அவேலி
தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
தாத்ரா & நகர் அவேலி (Dadra and Nagar Haveli, போர்த்துக்கேய மொழி: Nagar-Aveli), குசராத்தி: દાદરા અને નગર હવેલી, மராத்தி: दादरा आणि नगर हवेली) இது தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ எனும் ஒன்றிய பகுதியில் இந்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள மாவட்டம் ஆகும். இது, குஜராத்திற்கும் மகாராஷ்டிராவிற்கும் இடையே அமைந்துள்ளது[1]. இதன் தலைநகரம் சில்வாசா ஆகும். சில்வஸ்சாவில் நிறைந்துள்ள தொழிற்கூடங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் அரசுக்கு கூடுதல் வரிவாய் கிடைக்கிறது. இதை 26 சன்வரி 2020 அன்று தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
தாத்ரா மற்றும் நகர் அவேலி மாவட்டம் | |
— ஒன்றியப் பகுதி — | |
அமைவிடம் | 20°16′N 73°01′E |
நாடு | இந்தியா |
மக்களவைத் தொகுதி | தாத்ரா மற்றும் நகர் அவேலி மாவட்டம் |
மக்கள் தொகை • அடர்த்தி |
3,43,709 (2011[update]) • 700/km2 (1,813/sq mi) |
மொழிகள் | மராத்தி மற்றும் குஜராத்தி |
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 491 சதுர கிலோமீட்டர்கள் (190 sq mi) |
இணையதளம் | dnh.nic.in |
சில்வஸ்சா நகர மக்கள் குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகள் கலந்த வர்லி (Warli]) எனும் மொழி பேசுகின்றனர். சில்வஸ்சா நகர் அழகிய தோட்டங்களுக்கு பெயர் பெற்றது.
நகர் அவேலியில் உள்ள இதர நகரங்கள்: அம்லி (Amli), சிலி (Sili), , சைலி (Saili), அமல் (Amal), கனடி (Kanadi), வாசொன (Vasona), வெலுகம் (Velugam), டொலரா (Dolara) மற்றும் சிந்தாவனி.