தாய்
பெற்றவள்; ஈன்றவள்;அம்மா, அன்னை / From Wikipedia, the free encyclopedia
ஆண் - பெண் என இருபாலினருக்கிடையிலான பாலுறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்குப் பெண் பாலினமாக இருப்பவள் தாய் எனப்படுகிறாள். உயிரியல் அல்லது சமூக நோக்கில் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் பெண் தாய் (mother) அல்லது அன்னை எனப்படுவார். தமிழில் அம்மா, அன்னை, ஆய் போன்ற சொற்கள் தாயைக் குறிக்கப் பயன்படுகின்றன.
மனிதனைப் போன்ற பாலூட்டிகளில் தாய், கரு உண்டாவதில் இருந்து கரு குழந்தையாக வளர்ச்சி பெறும் வரை தன் கருப்பையில் தாங்கியிருக்கிறாள். குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் இருவருக்கும் மற்ற உறவினர்களுக்கும் பங்குகள் இருந்தாலும், தாய்க்கு சிறப்பான பங்கு உண்டு.
யானைகளில், யானைக்குட்டிக்கு அத்தியாவசியத் தேவைகள் உணவு, பாதுகாப்பு மற்றும் தாயன்பு தான். ஒரு வேளை தாய்ப்பால் கிடைக்காத நிலை ஏற்பட்டால் குட்டி வாழும் வாய்ப்பு குறைகிறது. ஆயினும் ஒரு யானைக்குட்டி மிக மோசமாக பாதிக்கப்படுவது தனிமையால் தான்.[1]