தேசியமயமாக்கல்
From Wikipedia, the free encyclopedia
நாட்டுடைமையாக்கல் அல்லது தேசியமயமாக்கல் (Nationalization) என்பது தனியாரின் உடைமைகளை அல்லது நிறுவனங்களைப் பல்வேறு காரணங்களுக்காக ஒரு நாட்டின் அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையாகும். பொதுவாக மக்களுக்கு இன்றியமையாத துறைகளை அரசு தன்வசப்படுத்தி அதன் மூலம் சீராக நிர்வகிக்கப்படுகிறது. தனியார்மயமாக்கல் என்பது இதற்கு எதிரான நடவடிக்கையாகும். பொருளாதாரக் காரணிகளுக்காகவே பெரும்பாலான நடவடிக்கைகள் அமைகின்றன. 2007-09 சர்வதேச நிதிநெருக்கடியின் போது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளால் இந்தியாவின் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.[1][2]