தொல்புரம்
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்க / From Wikipedia, the free encyclopedia
தொல்புரம் (Tholpuram), இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்கியுள்ள ஒரு ஊர் ஆகும்.[1] இவ்வூர் தொல்புரம் கிழக்கு, தொல்புரம் மத்தி, தொல்புரம் மேற்கு என மூன்று பிரிவுகளாக உள்ளது. யாழ்ப்பாணம்-மானிப்பாய்-காரைநகர் வீதியில் சித்தன்கேணி, சுழிபுரம் ஆகிய ஊர்களுக்கு இடையே அமைந்துள்ள இவ்வூர் யாழ்ப்பாண நகரில் இருந்து ஏறத்தாழ 15.5 கிமீ தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கில் சுழிபுரம், ஆகிய ஊர்களும், கிழக்கில் சித்தன்கேணி, வட்டுக்கோட்டை ஆகிய ஊர்களும், தெற்கில் மூளாயும், மேற்கில் சுழிபுரமும் உள்ளன.
விரைவான உண்மைகள் தொல்புரம், நாடு ...
தொல்புரம் | |
---|---|
ஆள்கூறுகள்: 9°45′27.489″N 79°57′0.9786″E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பிசெ பிரிவு | வலிகாமம் மேற்கு |
மூடு
பண்டை நாளிலே தொல்புரம் என்பது சுழிபுரம், மாதகல், திருவடிநிலை, பொன்னாலை, சங்கானை, வட்டுக்கோட்டை, பண்டத்தரிப்பு, சங்கரத்தை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெரும் பகுதியாக இருந்தது.[2]