பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் (Bandaranaike International Airport) இலங்கையில் இருக்கும் பிரதான முக்கிய பன்னாட்டு வானூர்தி நிலையமாகும்.இரண்டாம் உலகப்போரில் இது ராயல் வானூர்திப் படையின் தளங்களில் ஒன்றாக அமைந்தது.இன்றளவும் இதில் இலங்கை வான்படைக்குச் சொந்தமான வானூர்திப் படைத் தளமும் அமைந்துள்ளது. இது 1970இல் SWRD பண்டாரநாயக்கவின் நினைவாக பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் எனப் பெயரிடப்பட்டது. 1977இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிமாறியதும் கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் எனப் பெயர்மாற்றப்பட்டது. 1994 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும் மீள்வும் பழைய பெயரிற்கு மாற்றப்பட்டது.இலங்கையில் உள்ள இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையம் மத்தல ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையம் தெற்கு நகரான அம்பாந்தோட்டையில் அமைந்துள்ளது.
Bandaranaike International Airport බණ්ඩාරනායක ජාත්යන්තර ගුවන්තොටුපළ பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையம் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது/இராணுவ | ||||||||||||||
உரிமையாளர் | இலங்கை அரசாங்கம் | ||||||||||||||
இயக்குனர் | விமானநிலையம் மற்றும் வான்போக்குவரத்து சேவை [இலங்கை] நிறுவனம் | ||||||||||||||
சேவை புரிவது | கொழும்பு | ||||||||||||||
அமைவிடம் | கட்டுநாயக்கா, இலங்கை | ||||||||||||||
மையம் |
| ||||||||||||||
உயரம் AMSL | 26 ft / 8 m | ||||||||||||||
ஆள்கூறுகள் | 07°10′52″N 79°53′01″E | ||||||||||||||
இணையத்தளம் | www | ||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
| |||||||||||||||
புள்ளிவிவரங்கள் | |||||||||||||||
| |||||||||||||||
Statistics from Airport & Aviation Services Sri Lanka[1] |
ஜூன் 24, 2001]] அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் விமான நிலையத்தில் உள்ள கடுமையான பாதுகாப்புக்களை மீறி நுழைந்து 26 வர்த்தக மற்றும் போர் வானூர்திகளைச் சேதப்படுத்தினர்.
[[மார்ச் 26, 2007 அன்று இலங்கைத் தலைநகரான கொழும்பில் உள்ள அனைத்துலக விமான நிலையமான பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கருகாமையில் உள்ள விமானப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் தாக்குதல் நடத்தியதாக புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தகவல் வெளியிட்டார்.[2]