பண்டுகாபயன்
From Wikipedia, the free encyclopedia
பண்டுகாபயன் (கி.மு. 437-367) இலங்கையின் முதலாவதாகக் கருதப்படும் அரச மரபின் நான்காவது அரசனாவான். இவன் இம்மரபின் இரண்டாவது அரசனான பண்டுவாசுதேவனின் மகள் வழிப் பேரனும், மூன்றாவது அரசனான அபய மற்றும் அவனைப் பதவியிலிருந்து இறக்கிய பின் பகர ஆளுனராக இருந்த திஸ்ஸ ஆகியோரின் மருமகனும் ஆவான்.
விரைவான உண்மைகள் பண்டுகாபயன், ஆட்சி ...
பண்டுகாபயன் | |
---|---|
உபதிஸ்ஸ நுவரவின் அரசன் அனுராதபுர அரசன் | |
ஆட்சி | கி.மு. 437 – கி.மு. 367 |
முன்னிருந்தவர் | உபதிச்சன் |
மூத்தசிவன் | |
அரசி | சுவர்ணபாலி[1] |
மரபு | விசய வம்சம் |
தந்தை | தீககாமினி |
தாய் | இளவரசி சித்ரா |
பிறப்பு | கி.மு. 474[2] |
இறப்பு | கி.மு. 367 |
மூடு
"பண்டு காபய" என்று மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் இம்மன்னன் சிங்கள மன்னனாக மகாவம்சத்தில் சொல்லப்பட்டாலும், இவனது பெயர் "பண்டு கபாயன்" (பண்டு என்றால் "பழைய" ,கபாயன் என்றால் "சிவன்") என்றும் இது இந்துக்களின் பழம்பெரும் தெய்வமான "முந்துசிவன்" என்ற பெயரை ஒத்து உள்ளது என்றும், இதன்மூலம் இவன் ஒரு தமிழ் மன்னன் என்றும் வாதிடப்படுகிறது. இதே வாதம் இவனது பாட்டனான பண்டுவாசுதேவன் என்பவனுக்கும் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.[3]