பாலூட்டி
விலங்கின வகை. / From Wikipedia, the free encyclopedia
பாலூட்டி (இலங்கை வழக்கு: முலையூட்டி) (Mammal) என்பது தமது குட்டிகளுக்கு பால் கொடுக்கும் ஒரு வெப்ப இரத்த விலங்கினமாகும். இவை உயிர் வாழ்வதற்குத் தேவையான வெப்பம், இவற்றின் உடலின் இயக்கத்தில் இருந்தே உருவாக்கப்படுகிறது. பாலூட்டிகள் தங்களின் தோலினுள் பால் சுரப்பிகளைக் கொண்டுள்ளன.
பாலூட்டி புதைப்படிவ காலம்:220–0 Ma திராசிக் முதல் தற்போது வரை | |
---|---|
மேல் இடது மூலையிலிருந்து வலஞ்சுழியாக:ஒட்டகச் சிவிங்கி, பொன்னிறப்பழ வௌவால், சிங்கம், முள்ளெலி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
உட்தொகுதி: | தாடையுள்ளவை |
பெருவகுப்பு: | நான்கு காலிகள் |
(unranked) | பனிக்குடமுடையன |
வகுப்பு: | பாலூட்டி (Mammalia) L, 1758 |
Clades | |
|
பெரும்பாலான பாலூட்டிகள் நான்கு கால்களைக் கொண்டவை. இவற்றின் தோலின் மீது முடியைக் கொண்டிருக்கும். பெரும்பாலான பாலூட்டிகள், உயிருள்ள குட்டிகளை ஈன்று பேணுகின்றன. மிகச் சில பாலூட்டிகள் மட்டுமே முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன.
பாலூட்டிகள் எனும் வகுப்பில், 2008ஆம் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) கணக்கெடுப்பின்படி, 5488 சிற்றினங்கள் உள்ளன.[1] இதனைப் பாலூட்டியின அறிஞர்கள், உலகளாவிய நிலையில் 1,700 வகைகளாகத் தொகுத்துள்ளனர்.
பாலூட்டி வகுப்பானது, 1,229 பேரினங்களில், 153 குடும்பங்களாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. இவை 29 வரிசைகளில் அடங்குவதாகவும் அமைந்து உள்ளன.[2]