பொது மூலம்
From Wikipedia, the free encyclopedia
இரு உயிரினங்களுக்குப், புவியின் வாழ்க்கை வரலாற்றின் ஏதாவது ஒரு கட்டத்தில் பொதுவான முன்னோடி இருந்தால், அவ்வுயிரினங்களுக்கான பொது மூலம் அம்முன்னோடியாகும். எடுத்துக்காட்டாக, பூனை, புலி, சிங்கம், சிறுத்தை எனும் பூனை-இனத்தைச் சேர்ந்த அனைத்து இனங்களுக்கான முன்னோடி, 10.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஓர் உயிரினமாகும்.[1] இங்கு முன்னோடி எனக் குறிப்பிடப்படும் உயிரினம், தனிப்பட்ட ஒரு உயிரினமாகவோ, அல்லது பல்வேறு உயிரினங்களின் ஒன்றுசேர்ந்த உயிரணுக்குழுவாகவோ இருக்கும்.
படிவளர்ச்சிக் கொள்கையின் கூற்றுப்படி புவியிலுள்ள பல்வகையான அனைத்து உயிரினங்களும் ஒரே மூலத்திலிருந்து தோன்றின. இக்கோட்பாட்டுக்கு உயிர்ப் பொது மூலம் என்று பெயர்.