மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம்
மலேசியாவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் இரண்டாவது பாலம் / From Wikipedia, the free encyclopedia
மலேசியா - சிங்கப்பூர் இரண்டாவது பாலம் அல்லது மலேசியா - சிங்கப்பூர் இரண்டாவது இணைப்பு (ஆங்கிலம்: Malaysia–Singapore Second Link; மலாய் மொழி: Laluan Kedua Malaysia–Singapura; சீனம்: 马新第二通道) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தையும் சிங்கப்பூர் தீவையும் இணைக்கும் பாலம் ஆகும். 1998 ஜனவரி 2-ஆம் தேதி போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம் | |
---|---|
அதிகாரப் பூர்வ பெயர் | Malaysia–Singapore Second Link |
போக்குவரத்து | மோட்டார் வாகனங்கள் |
தாண்டுவது | ஜொகூர் நீரிணை |
பராமரிப்பு | பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் நிலப் போக்குவரத்து ஆணையம் (சிங்கப்பூர்) |
வடிவமைப்பாளர் | மலேசிய அரசாங்கம் மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் United Engineers Malaysia Berhad சிங்கப்பூர் அரசு நிலப் போக்குவரத்து ஆணையம் (சிங்கப்பூர்) |
வடிவமைப்பு | பேழை தூலப் பாலம் (Box girder bridge) |
மொத்த நீளம் | 1.92 கிலோமீட்டர்கள் (1.19 mi) (Bridge) 6 கிலோமீட்டர்கள் (3.7 mi) (இரண்டு சோதனைச் சாவடிகளுக்கும் இடையே உள்ள தூரம்) |
அகலம் | 25 மீட்டர்கள் (82 அடி) |
அதிகூடிய அகல்வு | 150 மீட்டர்கள் (0.093 mi) |
கட்டியவர் | United Engineers Malaysia Berhad |
திறப்பு நாள் | 2 சனவரி 1998 |
மலேசியாவில் இந்தப் பாலத்தை, பொதுவாக துவாஸ் பாலம் அல்லது துவாஸ் இரண்டாவது பாலம் என்று அழைப்பதும் உண்டு.[1] சிங்கப்பூரில், துவாஸ் இரண்டாவது இணைப்பு (Tuas Second Link) என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப் படுகிறது.
மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டது. சிங்கப்பூரின் அப்போதைய பிரதமர் கோ சொக் தோங்; மலேசியாவின் அப்போதைய பிரதமர் மகாதீர் பின் முகமது; ஆகியோரால் அதிகாரப் பூர்வமாக இந்தப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.[2][1]