மாயாதேவி கோயில், நேபாளம்
From Wikipedia, the free encyclopedia
மாயாதேவி கோயில் (Maya Devi Temple) நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களமான லும்பினியில் அமைந்துள்ள பண்டைய பௌத்தக் கோயில் ஆகும். இக்கோயில் கௌதம புத்தரின் அன்னையான மாயா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயில் கட்டப்பட்ட இடத்தில், மாயாதேவி கௌதமபுத்தரை ஈன்றதாகக் கருதப்படுகிறது. இக்கோயில் அருகே ஒரு குளம் மற்றும் புனித தோட்டம் அமைந்துள்ளது. மாயாதேவி கோயில், கிமு மூன்றாம் நூற்றாண்டில் அசோகரால் கட்டப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் மாயா தேவி கோயில், லும்பினி, அடிப்படைத் தகவல்கள் ...
மாயா தேவி கோயில், லும்பினி | |
---|---|
நேபாள நாட்டின் லும்பினியில் மாயா தேவி கோயில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | லும்பினி |
புவியியல் ஆள்கூறுகள் | 27.469554°N 83.275788°E / 27.469554; 83.275788 |
சமயம் | பௌத்தம் |
மூடு
2013-ஆம் ஆண்டில் இக்கோயில் அருகே அகழ்வாய்வு செய்யும் போது, கிமு ஆறாம் நூற்றாண்டு காலத்திய மரக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டது.[2]