மீட்பு (கிறித்தவம்)
From Wikipedia, the free encyclopedia
கிறிஸ்தவ சமயத்தைப் பொறுத்தவரை, மீட்பு என்னும் சொல் பாவத்தில் இருந்து விடுதலை பெறுவதைக் குறிக்கிறது. உலக மக்களைப் பாவங்களில் இருந்து விடுவிக்கவே, மகனாகிய கடவுள் இவ்வுலகில் மனிதராகத் தோன்றினார்[1] என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. மீட்பின் பரிசாக கிடைப்பது நிலைவாழ்வு ஆகும். கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம், கடவுளின் மீட்புத் திட்டத்தைப் பற்றிய செய்திகளையே கொண்டிருக்கிறது.