மொழிபு
From Wikipedia, the free encyclopedia
மொழிபு (narrative) அல்லது கதை என்பது புனைவு வகை உரைநடை இலக்கியமாகும்.[1] பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். திரைப்படவியலிலும் கதை, திரைக்கதை என கதை இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தூங்க வைப்பதற்காக சிறிய குழந்தைகளுக்கு, பாட்டிக் கதை, நீதிக் கதை போன்றவற்றை சொல்வது தமிழகத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. இக்கதை பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும், நகைச்சுவை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றையும், பண்டைய கால பழக்க வழக்கம், பழமொழி, தத்துவங்கள், போன்றவற்றையும் உள்ளடக்கியவனவாக இருக்கும். எ. கா. சூபிக் கதை, அரிச்சந்திரன் கதை உள்ளிட்டவை.