ராம்சர் சாசனம்
From Wikipedia, the free encyclopedia
ராம்சர் சாசனம் (Ramsar Convention) என்பது, ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு என்பவை தொடர்பான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆகும்.[2] இதை ஈரநிலங்களுக்கான சாசனம் என்றும் அழைப்பதுண்டு. 1971ல் இவ்வொப்பந்தம் ஈரானில் உள்ள ராம்சர் என்னும் நகரில் கையெழுத்தானது. இந்த நகரின் பெயரைத் தழுவியே ராம்சர் சாசனம் என்னும் பெயர் ஏற்பட்டது.[3]
விரைவான உண்மைகள் Ramsar Convention on Wetlands of International Importance Especially as Waterfowl Habitat, கையெழுத்திட்டது ...
Ramsar Convention on Wetlands of International Importance Especially as Waterfowl Habitat | |
---|---|
ராம்சர் சின்னம் | |
கையெழுத்திட்டது | 2 பெப்ரவரி 1971; 53 ஆண்டுகள் முன்னர் (1971-02-02) |
இடம் | ராம்சர், ஈரான் |
நடைமுறைக்கு வந்தது | 21 திசம்பர் 1975; 48 ஆண்டுகள் முன்னர் (1975-12-21) |
நிலை | ஏழு நாடுகளால் ஏற்கப்பட்டது |
கையெழுத்திட்டோர் | 23[1] |
தரப்புகள் | 172[1] |
வைப்பகம் | யுனெசுக்கோவின் பணிப்பாளர் நாயகம் |
மொழிகள் | ஆங்கிலம்(வேறுபாடு ஏற்பட்டால் வழக்கில் நிலவும்), பிரெஞ்சு, இடாய்ச்சு, உருசியம் எசுப்பானியம்[1] |
www |
மூடு
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தரப்பினரின் பேராளர்களின் மாநாடு இடம்பெறும். இது "ஒப்பந்தத் தரப்பினர் மாநாடு" எனப்படும். இவ்வொப்பந்தம் தொடர்பிலான கொள்கை வகுக்கும் உறுப்பான இந்தக் குழு, இவ்வொப்பந்தம் தொடர்பிலான வேலைகளை நிர்வாகம் செய்வதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினர் இவ்வொப்பந்தத்தின் இலக்குகளை அடைவதற்கான வழிவகைகளை மேம்படுத்துவதற்குமான தீர்மானங்களை எடுப்பதுடன் ஆலோசனைகளையும் வழங்கும்.