ரூபந்தேஹி மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
ரூபந்தேஹி மாவட்டம் (Rupandehi District) (நேபாளி: रुपन्देही जिल्लाகேட்கⓘ), தெற்காசியாவில் நேபாள நாட்டின், மாநில எண் 5-இல் அமைந்துள்ளது. ரூபந்தேஹி மாவட்டம் நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும்.
இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சித்தார்த்தநகர் ஆகும். இம்மாவட்டத்தின் பிற நகரங்கள் லும்பினி, தேவதகா மற்றும் பூத்வல் ஆகும். நேபாளத்தின் தராய் சமவெளியில் அமைந்த ரூபந்தேஹி மாவட்டத்தின் பரப்பளவு 1,360 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும்.[1] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 8,80,196 ஆகும்.[2] நேபாள மொழி மற்றும் அவதி மொழிகள் இங்கு பேசப்படுகிறது.