வசந்த்
தமிழ் திரைப்பட இயக்குநர் / From Wikipedia, the free encyclopedia
வசந்த் (Vasanth) பிரபலமான தமிழ்த் திரைப்பட இயக்குநர். தமிழ்நாட்டில் உள்ள தேவகோட்டையில் பிறந்தவர். இவர் தன்னுடைய பள்ளி கல்வியை தேவகோட்டை சிறீநிவாசா நடுநிலைப் பள்ளியிலும் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, கடலூரிலும் பயின்றார்[1][2]. இவருடைய முதற்படமான கேளடி கண்மணி சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. எஸ். பி. பாலசுப்பிரமணியம் நடித்த இந்தப் படம் திரையரங்குகளில் 285 நாள் ஓடிச் சாதனை படைத்தது. தமிழ்த் திரையுலகில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாக கேளடி கண்மணி திரைப்படம் கருதப்படுகிறது.[2]