அடிதொட்டி
உணவுத் தேவைக்காக விலங்குகளை கொல்லும் இடம் / From Wikipedia, the free encyclopedia
அடிதொட்டி (Slaughterhouse), அல்லது வதைகூடம், என்பது விலங்குகளைக் கொன்று அவற்றின் உடலிலிருந்து மனிதர்கள் உண்பதற்கான இறைச்சி தயாரிக்கப்படும் ஒரு இடமாகும். இது இறைச்சிக்கூடம் என்றும் கசாப்புக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. அடிதொட்டிகள் இறைச்சியைப் வழங்குகையில் பொட்டல அமைப்புகள் அவ்விறைச்சியை பிரித்தெடுத்து வகைப்படுத்தி விற்பனைக்கு ஏதுவாக பொட்டலம் கட்டும் வேலையைச் செய்கின்றன.
மனித நுகர்வுக்கு அல்லாத இறைச்சியை உற்பத்தி செய்யும் அடிதொட்டிகள் சில நேரங்களில் கழிவதைகூடங்கள் (knacker's yards அல்லது knackeries) என்று அழைக்கப்படுகின்றன. இங்குதான் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற விலங்குகளும் பணிக்குப் பயன்படாத மற்றும் பணியாற்றி ஓய்ந்த குதிரைகள் போன்ற பண்ணை விலங்குகளும் வெட்டப்படுகின்றன.
பெரிய அளவில் விலங்குகளை வெட்டுவது தளவாடங்கள், விலங்குகள் நலன், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மேலும் இது பொதுச் சுகாதாரத்தோடு தொடர்புடையதாகவும் இருக்கிறது. அடிதொட்டிகளை எங்கு நிறுவுவது என்பது கலாச்சார ரீதியிலும் பொதுமக்களுக்கு அவற்றின் மீதான வெறுப்பு,[1][2] சுகாதாரம்[3] ஆகியவற்றின் அடிப்படையிலும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
அடிதொட்டிகளுக்கு விலங்குகள் எடுத்துச் செல்லப்படும் போக்குவரத்து முறைகள், கொல்லப்படுவதற்கு முன்னதான ஏற்பாடுகள், விலங்குகளை வளர்த்து மேய்த்தல், கொல்லப்படுதல் என அனைத்தும் விலங்குரிமை அமைப்புகளால் தொடர்ந்து கண்டிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.[4]