![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/11/Flag_of_the_Governor-General_of_India_%25281885%25E2%2580%25931947%2529.svg/langta-640px-Flag_of_the_Governor-General_of_India_%25281885%25E2%2580%25931947%2529.svg.png&w=640&q=50)
இந்தியத் தலைமை ஆளுநர்
பதவி / From Wikipedia, the free encyclopedia
இந்தியத் தலைமை ஆளுநர் (Governor-General of India), அல்லது 1858 முதல் 1947 வரை வைசிராயும் இந்தியத் தலைமை ஆளுநரும் (Viceroy and Governor-General of India) இந்தியாவில் பிரித்தானிய நிருவாகத்தின் சார்பாளராகவும் அரசுத் தலைவராகவும் செயல்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசரின் சார்பாளராகவும் பணிவழிப்படி நாட்டுத் தலைவராகவும் விளங்கினார். இப்பதவி 1773இல் கொல்கத்தாவிலிருந்த வில்லியம் கோட்டையின் பிரித்தானிய மாநில தலைமை ஆளுநராக உருவாக்கப்பட்டது. துவக்கத்தில் வில்லியம் கோட்டைக்கு மட்டுமே ஆட்சியுரிமை பெற்ற தலைமை ஆளுநர் பின்னர் மற்ற கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றார். அனைத்து பிரித்தானிய இந்தியாவிற்குமான முழுமையான அதிகாரம் 1833ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பின்னர் இந்தியத் தலைமை ஆளுநர் என அறியப்பட்டார்.
விரைவான உண்மைகள் இந்திய வைசிராய் மற்றும் தலைமை ஆளுநர், வாழுமிடம் ...
இந்திய வைசிராய் மற்றும் தலைமை ஆளுநர் | |
---|---|
![]() பிரித்தானியா இந்தியாவின் தலைமை ஆளுநரின் கொடி | |
![]() இந்திய ஒன்றியத்தின் தலைமை ஆளுநரின் கொடி | |
வாழுமிடம் |
|
நியமிப்பவர் |
|
உருவாக்கம் | 20 அக்டோபர் 1773 (வில்லியம் கோட்டை) 22 ஏப்பிரல் 1834 (இந்தியா) |
முதலாமவர் | வாரன் ஹேஸ்டிங்ஸ் (வில்லியம் கோட்டை) வில்லியம் பென்டிங்கு பிரபு (இந்தியா) |
இறுதியாக |
|
நீக்கப்பட்ட வருடம் | 26 சனவரி 1950 |
அடுத்து வருபவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் பாக்கித்தான் தலைமை ஆளுநர் (பாக்கித்தான் ஆனா பகுதில்) |
மூடு