இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2014
From Wikipedia, the free encyclopedia
2014 மாகாணசபைத் தேர்தல்கள் (2014 Provincial Council elections) இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டு மாகாண சபைகளுக்கு 159 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2014 மார்ச் 29 இல் நடைபெற்றன. 5.9 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[1] இலங்கை மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் படிநிலையில் நடைபெற்று வருகின்றன. இவ்வகையில் இவ்விரண்டு மாகாண சபைகளும் 2014 சனவரி மாதத்தில் கலைக்கப்பட்டன. ஊவா மாகாணத்திற்கான தேர்தல் 2014 செப்டம்பர் 20 இல் நடத்தப்பட்டது. ஏனைய ஆறு சபைகளின் தேர்தல்கள் 2012, 2013 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன.
| |||||||||||||||||||||||||
2 மாகாணசபைகளுக்கு 159 இடங்கள் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 66.35% | ||||||||||||||||||||||||
|
மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுக) எதிர்பார்த்தது போல தெற்கு, மற்றும் மேற்கு மாகாணசபைகளைக் கைப்பற்றியது. ஆனாலும், மேல் மாகாணசபையில் ஐமசுக, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. சிறிய கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி, சனநாயகக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன தமது வாக்குகளை அதிகரித்திருந்தன.