மகிந்த ராசபக்ச
இலங்கையின் முன்னாள் பிரதமர் மற்றும் சனாதிபதி/நாடாளுமன்ற உறுப்பினர் / From Wikipedia, the free encyclopedia
பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa, சிங்களம்: පර්සි මහේන්ද්ර රාජපක්ෂ; பிறப்பு: 18 நவம்பர் 1945[1]), பொதுவாக மகிந்த ராசபக்ச (Mahinda Rajapaksa) என்பவர் இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் அரசுத்தலைவரும், முன்னாள் பிரதமரும் ஆவார்.[2] முன்னர் இவர் 2005 முதல் 2015 வரை 6 ஆவது இலங்கை அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார். மகிந்தவின் அரசுக்கும், அரசுத்தலைவர் கோட்டாபய இராசபட்சவிற்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்றுவந்த நிலையில், 2022 மே 9 இல் மகிந்த ராசபக்ச தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.[3].
மகிந்த ராசபக்ச Mahinda Rajapaksa | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2018 இல் மகிந்த ராசபக்ச | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கை பிரதமர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 21 நவம்பர் 2019 – 9 மே 2022 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | கோட்டாபய இராசபட்ச | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | ரணில் விக்கிரமசிங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ரணில் விக்கிரமசிங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 26 அக்டோபர் 2018 – 15 திசம்பர் 2018[lower-alpha 1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | ரணில் விக்கிரமசிங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ரணில் விக்கிரமசிங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 6 ஏப்ரல் 2004 – 19 நவம்பர் 2005 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | ரணில் விக்கிரமசிங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | இரத்தினசிறி விக்கிரமநாயக்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கையின் 6-வது அரசுத்தலைவர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 19 நவம்பர் 2005 – 9 சனவரி 2015 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரதமர் | இரத்தினசிறி விக்கிரமநாயக்க தி. மு. சயரத்தின | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | மைத்திரிபால சிறிசேன | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
12-வது எதிர்க்கட்சித் தலைவர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 18 திசம்பர் 2018 – 21 நவம்பர் 2019 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | இரா. சம்பந்தன் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | சச்சித்து பிரேமதாச | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 6 பெப்ரவரி 2002 – 2 ஏப்ரல் 2004 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | இரத்தினசிறி விக்கிரமநாயக்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ரணில் விக்கிரமசிங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | பேர்சி மகிந்த ராசபக்ச 18 நவம்பர் 1945 (1945-11-18) (அகவை 78) வீரகெட்டிய, தெற்கு மாகாணம், இலங்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசியல் கட்சி | இலங்கை பொதுசன முன்னணி (2018 இற்குப் பின்னர்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிற அரசியல் தொடர்புகள் | இலங்கை சுதந்திரக் கட்சி (2018 இற்கு முன்னர்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவர் | சிராந்தி ராசபக்ச | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | நாமல் யோசித்த ரோகித்த | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழிடம்(s) | கார்ல்டன் வீடு, தங்காலை, மெதுமுலனை வளவு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னாள் கல்லூரி | இலங்கை சட்டக் கல்லூரி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தொழில் | சட்டவறிஞர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இணையத்தளம் | இணையதளம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வழக்கறிஞரரான மகிந்தா 1970 இல் முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அரசுத்தலைவராகத் தனது முதலாவது ஆறாண்டு காலப் பதவியை 2005 நவம்பர் 19 இல் தொடங்கினார். 2010 அரசுத்தலைவர் தேர்தலில் இரண்டாம் தடவையாக 2010 சனவரி 27 இல் தெரிவானார். மூன்றாவது தடவையாக 2015 தேர்தலில் போட்டியிட்டு மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்று 2015 சனவரி 9 இல் பதவியில் இருந்து விலகினார்.[4] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும் இவரது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் இவர் பிரதமராக முடியவில்லை.[5]
2018 அக்டோபர் 28 இல், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி விலகியதை அடுத்து மகிந்த ராசபக்ச இலங்கைப் பிரதமராக அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். இந்நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரனாணது எனக் கூறி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக மறுத்தார். இதன் மூலம் நாட்டில் அரசியலமைப்பு நெருக்கடி உருவானது. இலங்கை நாடாளுமன்றம் ராசபக்சவுக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை 2018 நவம்பர் 14, 16 தேதிகளில் கொண்டு வந்தது. இரண்டு தீர்மானங்களையும் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை எனக் காரணம் கூறி சிறிசேன ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில், 2018 திசம்பர் 3 இல் ராசபக்சவின் நியமனத்தை நீதிமன்றம் ஒன்று செல்லுபடியற்றதாக்கியது.
ராசபக்ச 2018 திசம்பர் 15 இல் பிரதமர் பதவியில் இருந்து விலகி, எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற இலங்கை பொதுசன முன்னணியின் தலைவராக மகிந்த 2019 இல் பொறுப்பேற்றார். 2019 அரசுத்தலைவர் தேர்தலில் மகிந்தவின் தம்பி கோட்டாபய இராசபட்ச வெற்றி பெற்றதை அடுத்து மகிந்த நவம்பர் 18 இல் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2020 நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ராசபக்ச நான்காவது தடவையாக பிரதமரானார். 2022 மே 3 இல் மகிந்தவின் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று எதிர்க்கட்சிகளினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.[6] இராசபட்ச குடும்பத்தின் ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பொருளாதார நெருக்கடி இலங்கையின் விடுதலைக்குப் பிறகு அதன் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமையினால் நாட்டை திவால் நிலைக்கு கொண்டு வந்தது. போராட்டக்காரர்கள் அவரை "மைனா" என அழைத்து பதவி விலகக் கோரினர். 2022 மே 9 இல், மகிந்த தனது ஆதரவாளர்களை பேருந்துகள் மூலம் அழைத்து வந்து தனது அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார். ஆதரவாளர்கள் இலங்கை பொதுசன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழிநடத்தப்பட்டு, அலரி மாளிகைக்கு வெளியே கூடியிருந்த அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காலிமுகத் திடல் சென்று தாக்குதல்களை நடத்தினர். இதனை அடுத்து தென்னிலங்கையில் பல இடங்களிலும் வன்முறைகள் வெடித்தன. மகிந்த ராசபக்ச 2022 மே 9 இல் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.[7][8][9]