![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/37/Laxminarayan_Temple_in_New_Delhi_03-2016.jpg/640px-Laxminarayan_Temple_in_New_Delhi_03-2016.jpg&w=640&q=50)
இலட்சுமிநாராயண் கோயில்
From Wikipedia, the free encyclopedia
இலட்சுமிநாராயணன் கோயில் (Laxminarayan Temple) பிர்லா மந்திர் என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் தில்லியில் உள்ள இலட்சுமிநாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோவிலாகும். லக்ஷ்மிநாராயண் பொதுவாக மும்மூர்த்தியில் பாதுகாப்பாளராக இருக்கும் விஷ்ணுவைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்.இவர் தனது துணைவி இலட்சுமியுடன் இருக்கும்போதுநாராயணன் என்றும் அழைக்கப்படுகிறார். மகாத்மா காந்தியால் திறக்கப்பட்ட இந்த கோயில், ஜுகல் கிசோர் பிர்லா [1] என்பவரால் 1933 மற்றும் 1939 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. அண்மைக் கோயில்கள் சிவன், கிருட்டிணர் மற்றும் புத்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை.
இலட்சுமிநாராயண் கோயில் | |
---|---|
![]() | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
அமைவு: | புது தில்லி |
ஆள்கூறுகள்: | 28°37′58″N 77°11′56″E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்துக் கோயில் கட்டிடக்கலை |
வரலாறு | |
அமைத்தவர்: | பாலதேவ் பிர்லா |
இது தில்லியில் கட்டப்பட்ட முதல் பெரிய இந்துக் கோயிலாகும். இந்த கோயில் 7.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பல சிவாலயங்கள், நீரூற்றுகள் மற்றும் இந்து மற்றும் தேசிய சிற்பங்களுடன் ஒரு பெரிய தோட்டத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் சொற்பொழிவுகளுக்காக கீதா பவன் என்ற அரங்கம் உள்ளது. தில்லியின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றான இந்த கோயில் கிருட்டிண ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.