மும்மூர்த்திகள்
From Wikipedia, the free encyclopedia
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை மும்மூர்த்தி அல்லது திரிமூர்த்தி (சமஸ்கிருதம்:त्रिमूर्तिः, ''trimūrti'') என்று குறிப்பிடுகின்றார்கள். சிவன் தனது இடப்புறத்திலிருந்து விஷ்ணுவையும், வலப்புறத்திலிருந்து பிரம்மதேவரையும் படைத்ததாக விஷ்ணுவின் அவதாரமான வேதவியாசர் எடுத்தியம்புகிறார். ஒருமுறை பிரம்மருக்கும், விஷ்ணுவுக்கும் தான்தான் பெரியவர் என்று பூசல் ஏற்பட்டதன் காரணமாக பிரம்மன், பத்ம கற்பத்தில் திருமாலின் உந்தி கமலத்திலிருந்து பிறப்பெடுப்பார் என்று திருமாலுக்கு சிவன் அருளினார்.[1] இந்து சமயத்திலே இந்த அண்டத்தையும் அதில் உள்ள உயிர்களையும் உருவாக்கும் படைத்தல் தொழிலைச் செய்பவராகப் பிரம்மாவையும், அவ்வாறு படைக்கப்பட்டவற்றைப் பாதுகாக்கும் காத்தல் தொழிலைச் செய்பவராக விஷ்ணுவையும், அழித்தல் தொழிலைச் செய்பவராகச் சிவனையும் கொள்வர். இந்துக் கடவுளரில் மிகவும் முக்கியமான இம்மூவரையும் மும்மூர்த்திகள் எனக் குறிப்பிடுவர்.
மும்மூர்த்திகள் | |
---|---|
தேவநாகரி | त्रिमूर्ति |
சமசுகிருதம் | திரிமூர்த்தி |
வகை | தேவர் (இந்து சமயம்) |
துணை | முத்தேவியர் |
இம்மூவரையும் ஒருங்கே பிரம்மா-விஷ்ணு-சிவன் என்பது வழக்கம். இக் கருத்துருவை உருவ வடிவத்தில் ஒருங்கே குறிக்கும்போது சில சமயங்களில் ஒரே கழுத்தில் மூன்று தலைகள் இருப்பது போல் அமைப்பர். ஒரே தலையில் மூன்று முகங்களைக் கொண்டதாகவும் அமைப்பது உண்டு.