![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d1/Illikkal_Kallu_%2528%25E0%25B4%2587%25E0%25B4%25B2%25E0%25B5%258D%25E0%25B4%25B2%25E0%25B4%25BF%25E0%25B4%2595%25E0%25B5%258D%25E0%25B4%2595%25E0%25B5%25BD_%25E0%25B4%2595%25E0%25B4%25B2%25E0%25B5%258D%25E0%25B4%25B2%25E0%25B5%258D_%2529.jpg/640px-Illikkal_Kallu_%2528%25E0%25B4%2587%25E0%25B4%25B2%25E0%25B5%258D%25E0%25B4%25B2%25E0%25B4%25BF%25E0%25B4%2595%25E0%25B5%258D%25E0%25B4%2595%25E0%25B5%25BD_%25E0%25B4%2595%25E0%25B4%25B2%25E0%25B5%258D%25E0%25B4%25B2%25E0%25B5%258D_%2529.jpg&w=640&q=50)
இல்லிக்கல் கல்லு
கேரள சுற்றுலா மையம் / From Wikipedia, the free encyclopedia
இல்லிக்கல் கல்லு (Illickal Kallu) என்பது தென்னிந்தியாவின் கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தில் இல்லிக்கல் மலையின் மேல் அமைந்துள்ள ஒரு பகுதி ஆகும். கோட்டயம் தொடருந்து நிலையத்திலிருந்து இல்லிகல் கல்லுக்கான தொலைவு 57 கி.மீ. ஆகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3400 அடி உயரத்தில் அமைந்துள்ள இல்லிக்கல் கல்லு, மூன்னிலாவ் மற்றும் மீனாசில் தாலுகாவின் தலநாடு கிராமத்தில் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும். இந்தப் பாறையின் ஒரு பாதி மட்டுமே எஞ்சியிருக்கிறது, பாறையின் மற்ற பாதி விழுந்துவிட்டது. இதன் அருகிலுள்ள நகரம் டீகோய் . இந்த மலை உச்சியில் இருந்து ஏராளமான மலை ஓடைகள் உருவாகி கீழே பாய்ந்து மீனாசிலாறை உருவாக்குகின்றன. சுற்றுலா பயணிகள் சிகரத்தை அடைய ஒரு கி.மீ. தொலைவுக்கு மலையேற வேண்டும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3b/Illikal_Kallu.jpg/640px-Illikal_Kallu.jpg)
இல்லிக்கல் கல்லு | |
---|---|
Tourist destination | |
![]() இல்லிக்கல் பாறை | |
ஆள்கூறுகள்: 9°44′43″N 76°48′42″E | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கொல்லம் |
அரசு | |
• வகை | கிராம பஞ்சாயத்து |
• நிர்வாகம் | മൂന്നിലവ്, Thalanadu |
பரப்பளவு | |
• மொத்தம் | 33.41 km2 (12.90 sq mi) |
ஏற்றம் | 1,036 m (3,399 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகாள் | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 686580 |
வாகனப் பதிவு | KL-35 |
அருகில் உள்ள நகரங்கள் | மூனிலவு, எராட்டுப்பேட்டா |
இல்லிக்கல் மலையில் மூன்று மலைகள் உள்ளன. ஒவ்வொன்றும் கடல் மட்டத்திலிருந்து 3,400 அடி வரை உயரம் கொண்டவை. இந்த ஒவ்வொரு மலையும் ஒவ்வோரு விந்தை வடிவில் உள்ளன. இவற்றில் ஒன்று காளான் தோற்றத்தை ஒத்திருக்கிறது, அதனால்தான் இது குடகல்லு (குடை வடிவ பாறை) என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது மலை பக்கவாட்டுகளில் சற்று கூன் போட்டிருக்கும். எனவே இது கூனன் கல் (கூனு கல்லு) என்று குறிப்பிடப்படுகிறது. நீலக்கொடுவிலி என்ற மூலிகை இங்கு வளர்வதாக கூறப்படுகிறது. இப்பூ அமானுட சக்தி பெற்றது எனபதால் இதை வைத்திருப்போருக்கு செல்வம் பெருகும், அருவடை செழிக்கும் என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இந்த இரண்டு குன்றுகளுக்கு குறுக்கே அரை அடி அகலத்தில் ஒரு பாலம் இருக்கிறது. இதன் பெயர் நரகப் பாலம். இல்லிக்கல் கல்லுவின் அழகும் நிலப்பரப்பும் கொடைக்கானலில் உள்ள தூண் பாறைகளைப் போன்றது. [1]
இந்த மலைய உச்சியில் இருந்து பார்த்தால், அரபிக் கடல் தொடுவானத்தின் கீழ் மெல்லிய நீலப்பட்டிழை போல இழையும். பௌர்ணமி நாளில் இங்கிருந்து பார்த்தால் சூரிய அஸ்தமனக் காட்சி கனவுலகமே கண்ணில் தெரிவதுபோலத் தோன்றும். அப்போது முழு நிலா மெல்ல மெல்ல மேலெழும்பி, தகதகக்கும் மற்றொரு கதிரவன்போல தோன்ற அசல் ஆதவனோ தங்க ஒளி மங்க மறைவான்.