ஏர் கோஸ்டா
From Wikipedia, the free encyclopedia
ஏர் கோஸ்டா (Air Costa) ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விஜயவாடாவினை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்திய விமானச் சேவை நிறுவனம் ஆகும். ஏர் கோஸ்டாவின் முதல் விமானப் பயணம் அக்டோபர் 2013 இல் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டது. சென்னை விமான நிலையம் ஏர் கோஸ்டாவின் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு மையங்களில் ஒன்றாகும்.[1][2][3] இது விஜயவாடாவினை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நிறுவனமான LEPL குழுமத்தின் ஒரு பகுதியாகும். புலம்பெயர்ந்த விமானிகள் மற்றும் பொறியியலாளர்களுடன் சேர்த்து மொத்தம் 300 பணியாட்களுடன் தொடக்கப்பட்ட இந்நிறுவனம், அக்டோபர் 2013 முதல் தனது பணியினை செயல்படுத்தத் துவங்கியது.[4] எம்பெரர் ஈ – 170 வகை விமானங்களில் இரு விமானங்களைக் கொண்டு இது செயல்படத் தொடங்கியது.
| |||||||
செயற்பாடு துவக்கம் | 15 அக்டோபர் 2013 | ||||||
---|---|---|---|---|---|---|---|
மையங்கள் |
| ||||||
இரண்டாம் நிலை மையங்கள் | விஜயவாடா விமானநிலையம் | ||||||
கவன செலுத்தல் மாநகரங்கள் | திருப்பதி விமானநிலையம் | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 4 (+50 on order) | ||||||
சேரிடங்கள் | 9 | ||||||
தாய் நிறுவனம் | LEPL குழுமம் | ||||||
தலைமையிடம் | விஜயவாடா | ||||||
முக்கிய நபர்கள் | எல். வி. எஸ். ராஜசேகர் (இயக்குநர் & முதன்மை செயல் அலுவலர், LEPL குழுமம்) கேப்டன் கே. என். பாபு (முதன்மை செயல் அலுவலர், ஏர்கோஸ்டா) | ||||||
பணியாளர்கள் | 740 | ||||||
வலைத்தளம் | Aircosta.in |
அடுத்தகட்ட வளர்ச்சிக்காக, இந்தியாவில் மட்டும் 2015 ஆம் ஆண்டிற்காக சுமார் 150 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.அத்துடன் 2015 ஆம் ஆண்டிற்குள், விஜயவாடா விமான நிலையத்தில் விமான பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் சீர்செய்தல் போன்ற செயல்பாடுகளைச் செய்யும் வண்ணம் வசதிகள் ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது, ஏர் கோஸ்டாவின் பராமரிப்பு மையம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ளது.