ஓசுனி முபாரக்
From Wikipedia, the free encyclopedia
ஓசுனி முபாரக் (Hosni Mubarak; 4 மே 1928 – 25 பெப்ரவரி 2020) எகிப்திய இராணுவ, அரசியல் தலைவர் ஆவார். இவர் 1981 முதல் 2011 வரை எகிப்தின் அரசுத்தலைவராக இருந்தவர்.
ஓசுனி முபாரக் Hosni Mubarak | |
---|---|
حسني مبارك | |
2009 இல் முபாரக் | |
4-வது எகிப்திய அரசுத்தலைவர் | |
பதவியில் 14 அக்டோபர் 1981 – 11 பெப்ரவரி 2011 | |
பிரதமர் | See list
|
Vice President | ஒமார் சுலைமான் |
முன்னையவர் | சூபி அபு தாலிப் (பதில்) |
பின்னவர் | முகமது உசைன் தந்தாவி (இடைக்கால) |
எகிப்தியத் தலைமை அமைச்சர் | |
பதவியில் 7 அக்டோபர் 1981 – 2 சனவரி 1982 | |
குடியரசுத் தலைவர் | சூபி அபு தாலிப் (பதில்) இவரே |
முன்னையவர் | அன்வர் சாதாத் |
பின்னவர் | அகமது முகைதீன் |
15-வது எகிப்தியத் துணை அரசுத்தலைவர் | |
பதவியில் 16 ஏப்ரல் 1975 – 14 அக்டோபர் 1981 | |
குடியரசுத் தலைவர் | அன்வர் சாதாத் |
முன்னையவர் | உசைன் எல்-சபெய் மகுமுது பௌசி |
பின்னவர் | ஒமார் சுலைமான் |
கூட்டுசேரா இயக்கத்தின் பொதுச் செயலர் | |
பதவியில் 16 சூலை 2009 – 11 பெப்ரவரி 2011 | |
முன்னையவர் | ராவுல் காஸ்ட்ரோ |
பின்னவர் | முகம்மது தந்தாவி (பதில்) |
வான்படைத் தளபதி | |
பதவியில் 23 ஏப்ரல் 1972 – 16 ஏப்ரல் 1975 | |
குடியரசுத் தலைவர் | அன்வர் சாதாத் |
முன்னையவர் | அலி பக்தாவி |
பின்னவர் | மகுமுது சாக்கர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முகம்மது ஓசுனி எல் சாயிது முபாரக் (1928-05-04)4 மே 1928 காபிர்-எல் மெசெலா, எகிப்து |
இறப்பு | 25 பெப்ரவரி 2020(2020-02-25) (அகவை 91) கெய்ரோ, எகிப்து |
அரசியல் கட்சி | தேசிய சனநாயகக் கட்சி (1978–2011) |
துணைவர் | சூசன் தாபெத் (தி. 1959) |
பிள்ளைகள் |
|
முன்னாள் கல்லூரி | எகிப்திய இராணுவக் கல்விக்கழகம் எகிப்திய வான்படைக் கல்விக்கழகம் சோவியத் இராணுவக் கல்விநிலையம் |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | Egypt |
கிளை/சேவை | எகிப்து வான்படை |
சேவை ஆண்டுகள் | 1950–1975 |
தரம் | – வன்படை உயர் தலைவர்[1] |
கட்டளை | எகிப்திய வான்படை |
அரசியலுக்கு வருவதற்கு முன், முபாரக் எகிப்திய வான்படையில் 1972 முதல் 1975 வரை தளபதியாகப் பணியாற்றினார்.[1] அரசுத்தலைவர் அன்வர் சாதாத் 1981 இல் படுகொலை செய்யப்பட்ட பின்னர் முபாரக் அரசுத்தலைவரானார். முபாரக் கிட்டத்தட்ட முப்பதாண்டு காலம் அரசுத்தலைவராக இருந்தார். 43 ஆண்டுகள் பதவியில் இருந்த முகம்மது அலி பாசாவின் பின்னர் அதிககாலம் எகிப்தின் அரசுத்தலைவர் பதவியில் இருந்தவர் முபாரக் ஆவார்.[2] 2011 எகிப்தியப் புரட்சியின் போது இடம்பெற்ற 18-நாள் ஆர்ப்பாட்டங்களை அடுத்து முபாரக் பதவியில் இருந்து விலகினார்.[3] 2011 பெப்ரவரி 11 இல் எகிப்தின் ஆட்சி இராணுவத் தலைமைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.[4][5]
2011 ஏப்ரல் 13 இல் முபாரக்கும் அவரது இரண்டு மகன்களும் ஊழல் மற்றும் அதிகார முறைகேடு ஆகிய குற்ரச்சாட்டுகளுக்காக 15 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.[6] மக்கள் புரட்சியின் போது அமைதியான போராட்டக்காரர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கத் தவறியதற்காக முபாரக்கிற்கு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.[7] இதற்கான விசாரணைகள் 2011 ஆகத்து 3 ஆம் நாள் ஆரம்பமாயின.[8] 2012 சூன் 2 இல், எகிப்திய நீதிமன்றம் முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கியது. சிறைக்காலத்தில், இவர் தொடர்ச்சியான சுகவீன நெருக்கடிகளை சந்தித்தார். 2013 சனவரி 13 இல், எகிப்திய உயர் நீதிமன்றம் முபாரக் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மீள் விசாரணைக்கு உத்தரவிட்டது.[9] இவரது வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முபாரக், அவரது மகன்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு 2015 மே 9 சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.[10] 2015 அக்டோபர் 12 இல் முபாரக் இராணுவ மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டு, மகன்கள் விடுதலை செய்யப்பட்டனர்.[11] 2017 மார்ச் 2 இல் இவர் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டு, 2017 மார்ச் 24 இல் விடுதலை செய்யப்பட்டார்.[12][13]
2020 பெப்ரவரி 25 இல் முபாரக் தனது 91-வது அகவையில் கெய்ரோவில் காலமானார்.[14][15] இவரது உடல் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.[16]