கை கழுவுதல்
From Wikipedia, the free encyclopedia
கை கழுவுதல் (Hand washing) என்பது கையில் படிந்துள்ள மண், அழுக்குகளையும், நுண்ணுயிரிகளையும் நீக்க சுத்தம் செய்வது ஆகும். கைகழுவுவதற்கு நீர் மற்றும் சவர்க்காரம் போன்றவை கிடைக்கவில்லை என்றால் சாம்பலைப் பயன்படுத்தியும் சுத்தம் செய்யலாம்.[1]
மருத்துவரீதியாகப் பாா்த்தால் பல நோய்கள் கைகழுவாமல் இருப்பதால்தான் பரவுகிறது. கைகழுவுவதால்தான் நோய்களைப் பரப்பக்கூடிய பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அழிக்கப்படுகிறன. உணவினைக் கையாளக்கூடியவா்கள், வேலை செய்பவா்கள் மருத்துவத் துறையில் இருப்பவா்கள் போன்றவா்களுக்கு கைகழுவுதல் பயிற்சி என்பது அடிப்படையாகக் கருதப்படுகிறது. சோப்பினால் கைகழுவுதல் என்பது பலவகையான நோய்களிலிருந்து காக்கப் பயன்படுகிறது, உதாரணமாக காலரா, வயிற்றுப்போக்கு போன்றவை பரவுவதிலிருந்து காக்கிறது. கைக்கழுவுதல் தோல் நோய்களிலிருந்தும் காக்கிறது. பெரும்பாலான மக்கள் தீ நுண்மத் தொற்று, தடிமனாலும்பாதிக்கப்படுகின்றனர் காரணம் அவா்கள் கைகளை கழுவாமல் தங்கள் கண்களைத் தொடுதல், மூக்கில் விரல்வைத்தல், வாயில் கைகளை வைத்தல் போன்றவற்றைச் செய்வதால் ஆகும்.