![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/af/TamilPopulation-World.png/640px-TamilPopulation-World.png&w=640&q=50)
சஞ்சிக்கூலி
From Wikipedia, the free encyclopedia
சஞ்சிக்கூலி என்பது 19-ஆம் 20-ஆம் நூற்றாண்டுகளில், தென்னிந்தியாவில் இருந்து மலாயாவுக்கு கூலி வேலைகள் செய்ய அழைத்து வரப்பட்ட இந்தியர்களைக் குறிக்கும் ஒரு வழக்குச்சொல் ஆகும். இது சஞ்சி (மலாய்: Janji) எனும் மலாய்ச் சொல்லில் இருந்து உருவானது. தமிழில் ஒப்பந்தம் என்று பொருள்படும்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(![]() புலம்பெயர் தமிழரின் மக்கள் தொகை. | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() | 72,138,958 (2011)[1] |
![]() | 3,113,247 (2012)[2] |
![]() | 1,892,000 (2000)[3] |
![]() | 250,000 (2008)[4] |
![]() | 200,000 (2008)[4] |
![]() | 200,000 (2008)[4] |
![]() | 138,675 (2012) [5] |
![]() | 218,000 (2011)[6] |
![]() | 132,573 (2009)[7] |
![]() | 115,000 (2008)[4] |
![]() | 110,000 (2008)[8] |
![]() | 100,000 (2008)[8] |
![]() | 50,000 (2008)[8] |
![]() | 40,000 (2011)[9] |
![]() | 40,000 (2008)[4] |
![]() | 30,000 (2008)[4] |
![]() | 25,000 (2008)[4] |
![]() | 20,000 (2008)[4] |
![]() | 10,000 (2008)[4] |
![]() | 10,000 (2008)[4] |
![]() | 10,000 (2008)[4] |
![]() | 7,000 (2008)[4] |
![]() | 7,000 (2008)[4] |
மொழி(கள்) | |
தமிழ் | |
சமயங்கள் | |
பெரும்பான்மை இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
திராவிடர் |
மலாயாவில் இருந்த பிரித்தானியத் துரைமார்கள் தென்னிந்தியாவிற்கு கங்காணிகளை அனுப்பி வைத்தனர். தென்னிந்தியாவில் இருந்து ஆட்களைக் கொண்டு வருமாறு அந்தக் கங்காணிகள் பணிக்கப் பட்டனர். ’மலாயாவில் காசும் பணமும் கித்தா மரத்தில் காய்ச்சுத் தொங்குகிறது’ எனும் கங்காணிகளின் ஆசை வார்த்தைகளை நம்பிய தென்னிந்திய மக்கள், மலாயாவுக்குள் ஆயிரக்கணக்கில் அழைத்து வரப் பட்டனர்.
இப்படி அழைத்து வரப் படுவற்கு கங்காணி முறை என்று பெயர். இலங்கையில் ஒப்பந்தக் கூலி முறை என்று அழைக்கப் பட்டது. தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் சஞ்சிக்கூலிகளாய் மலாயாவுக்குக் கொண்டு வரப்பட்டார்கள். மலேசிய வரலாற்றில் சஞ்சிக்கூலிகள் என்பது ஒரு துயர அத்தியாயத்தின் முதல்பக்கம்.