சமணம்
சைனம், ஆசீவகம், சாவகம் ஆகிய சமயங்களுக்குப் பொதுவான மரபு / From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை மெய்யியல் மற்றும் தத்துவ சொல் பற்றியது. இந்திய சமயம், தர்ம மதம், சைனம் என்பதைப் பாருங்கள்.
சமணம் (Sramana) என்பது பண்டைய இந்தியாவில் நிலவிய சில சமயக் கோட்பாடுகளைக் குறிக்கும். சமணம் என்ற சொல் சிரமண (śramaṇa) என்ற வடமொழிச்சொல்லின் சிதைவு; சிரமண என்றால் தன்னை வருத்துகை என்று பொருள்[1] பொ.ஊ. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சில குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே சைனத்தை மட்டும் குறிக்க தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ் மொழி நிகண்டுகளில் சாவகர், அருகர், ஆசீவகர் மூவரையுமே சமணர் என பண்டைய தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர். பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் பௌத்தம்,[2] அஞ்ஞானம், வேதாந்தம் போன்றவற்றையும் சமணம் என்றே அடையாளப்படுத்தினர்.[3][4]