சண்டேசுவர நாயனார்
சைவ சமய 63 நாயன்மார்களில், 'அந்தணர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மார். / From Wikipedia, the free encyclopedia
சண்டேசுவர நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். விசாரசருமா என்ற இயற்பெயருடைய இவர் சிவபெருமானுக்கு அலிங்க பூசை செய்து கொண்டிருந்த போது அவருடைய தந்தையே அதற்கு இடையூறு செய்தார்.[1][2] அதனால் கோபம் கொண்டவர் தந்தையை மழுவால் வெட்டினார். அதன் காரணமாக சிவபெருமான் தன்னுடைய பூசைக்கு உரிய பொருட்களுக்கு உரியவராக சண்டேசுவர் எனும் பதவியளித்தார்.
விரைவான உண்மைகள் சண்டேசுவர நாயனார், பெயர்: ...
சண்டேசுவர நாயனார் | |
---|---|
பெயர்: | சண்டேசுவர நாயனார் |
குலம்: | அந்தணர் |
பூசை நாள்: | தை உத்திரம் |
அவதாரத் தலம்: | திருசேய்ஞலூர் |
முக்தித் தலம்: | ஆப்பாடி |
மூடு
சண்டேசுவர பதவியைப் பெற்றமையால் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இவரை சண்டேசர், சண்டிகேசுவர் என்றும் அழைக்கின்றனர்.