From Wikipedia, the free encyclopedia
சரபா அல்லது சரபம் என்பது ( கன்னடம்: ಶರಭ) இந்துதொன்மவியலில் பகுதி சிங்கமாகவும் பகுதி பயங்கர பறவையாகவும் உள்ள ஓர் விலங்கு. சில சமசுகிருத இலக்கியங்களில் இது எட்டு கால்களை உடைய, சிங்கம் மற்றும் யானையையும் கொல்லக்கூடிய வலுவுள்ள மிருகமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் சில இலக்கியங்களில் எட்டு காலுடைய மானாகவும் விவரிக்கப்படுகிறது.[1][2] சரபம் என்பது சிங்கத்தைக் கொல்லவல்லதாகக் கூறப்படும் எட்டுக்கால் பறவை (எண்காற்புள்) ஆகும். தமிழ் இலக்கியங்களில் இது சிம்புள் எனவும் போற்றப்பட்டுள்ளது. நான்கு காலும் பறக்கும் இறகுகளும் கொண்டு கோயில் சிற்பங்களில் காணப்படும்.
திருமால் நரசிங்க உருவம் [3] தாங்கி இரணியனைக் கொன்றார். அதன் செருக்கால் உலகை அழிக்கலானார். தேவர்கள் சிவனிடம் முறையிட்டுக்கொண்டனர். சிவன் சரபம் என்னும் பறவை வடிவம் கொண்டு நரசிங்கத்தின் கொட்டத்தை அடக்கினார். இது வடநூல் புராணக் கதைகளில் இப்பறவை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கதை சரப புராணம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சரபா கருநாடக அரசின் சின்னமாகவும் மைசூர் பல்கலைக்கழகம் மற்றும் கருநாடகா அரசு சோப்பு தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றின் சின்னங்களிலும் இடம் பெற்றுள்ளது.
சரபம் என்னும் பறவை செந்நிற ஆடையைப் போர்த்திக்கொண்டு மேல்மாடி முற்றத்தில் உறங்கிக்கொண்டிருந்த நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் மிருகாபதி என்பவளைப் புலராத தசைப்பிண்டம் எனக் கருதித் தூக்கிச் சென்றது. காட்டில் வைத்து உண்ணத் தொடங்குகையில் மிருகாபதி விழித்துக்கொண்டமையால் பெண் என அறிந்து உண்ணாமல் பறந்து போய்விட்டது. கண்டப்புள், கண்டபேரண்டம், கருடப் பறவை என்பன சரபப் பறவையின் வேறு பெயர்கள்.[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.