சாவோ எர்பெங்
சீன அரசியல்வாதி (1845-1911) / From Wikipedia, the free encyclopedia
சாவோ எர்பெங் (Zhao Erfeng) (1845-1911), இவர் ஓர் சிங் வம்சத்தைச் சேர்ந்த அதிகாரியாவார். சீனாவின் குயிங் வம்சத்தின் கீழ் நிர்வாக மற்றும் இராணுவ பிரிவுகளாக இருந்த எட்டு பதாகைகள் என்பதைச் சேர்ந்தவராவார். இவர் எளிய நீலப் பதாகையைச் சேர்ந்தவர். 1908 மார்ச்சில் நியமிக்கப்பட்ட திபெத்தின் கடைசி உயரதியாக இவர் அறியப்படுகிறார். மஞ்சு இனத்தைச் சேர்ந்த யூ மற்றொரு உயரதிகாரியாக நியமிக்கப்பட்டார். சிச்சுவான் - ஊபேய் தொடர்வண்டியின் முன்னாள் தலைமை இயக்குநராகவும், சிச்சுவான் மாகாணத்தின் பொறுப்பு ஆளுநராகவும் இருந்த இவர், ஏகாதிபத்திய சகாப்தத்தின் பிற்பகுதியில் மிகவும் மோசமான சீன அதிகாரியாக இருந்தார். இவர் காம் பகுதி (கிழக்கு திபெத்) முழுவதும் இராணுவப் படைகளை வழிநடத்தி இறுதியில் 1910 இல் லாசாவை அடைந்தார். இது இவருக்கு "சாவோ தி புட்சர்" [1] [2] என்றப் புனைபெயரைப் பெற்றுத் தந்தது.
சாவோ எர்பெங் | |
---|---|
சாவோ எர்பெங் | |
திபெத்தின் அதிகாரி | |
பதவியில் 1908–1911 | |
ஆட்சியாளர் | குவாண்டங் பேரரசர் |
முன்னையவர் | லியான்யூ |
பின்னவர் | பதவி அழிக்கப்படது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1845 |
இறப்பு | 1911 சிச்சுவான் |
காரணம் of death | தலை துண்டிப்பு |
தேசியம் | ஹான் சீனர் |
Military service | |
போர்கள்/யுத்தங்கள் | 1905 திபெத்திய கிளர்ச்சி, திபெத் மீதான சீனாவின் படையெடுப்பு (1910), 1911 திபெத்திய கிளர்ச்சி, சீனப் புரட்சி (1911) |