சோடசா
From Wikipedia, the free encyclopedia
சோடசா (Sodasa) (கரோஷ்டி: 𐨭𐨂𐨜𐨯 Śu-ḍa-sa, Śuḍasa;[3]மத்திய கால பிராமி: Śo-dā-sa, Śodāsa, also சோடசா என்பதற்கு சகர்களின் மொழியில் நல்ல செயல்களை நினைவில் கொண்டவர் எனப்பொருளாகும்.[4]) கிபி 15-ஆம் ஆண்டில் மன்னர் சோடசா, இந்தோ-சிதிய வம்சத்தின் மதுரா பகுதிகளை ஆண்ட வடக்கு சத்திரபதி ஆவார்.[5] இவர் தட்சசீலம் முதல் மதுரா வரையான பகுதிகளை ஆண்ட வடக்கு சத்திரபதி மன்னர் ராஜுவுலாவின் மகன் ஆவார்.[6]மலைக்கோயில் கல்வெட்டு, மோரா கிணறு கல்வெட்டு மற்றும் மதுரா சிங்கத் தூணில் மன்னர் சோடசாவின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.[7][8]
சோடசா | |
---|---|
இந்தோ சிதிய வம்சத்தின் வடக்கு சத்திரபதி மன்னர் | |
ஆட்சிக்காலம் | கிபி 15 |
முன்னையவர் | ராஜுவுலா |
தந்தை | ராஜுவுலா |
தாய் | கமுயா அயாசா |
வடக்கு சத்திரபதி மன்னர் சோடசா, மேற்கு சத்ரபதிகள்|மேற்கு சத்திரபதி]] மன்னர் நகபானர் மற்றும் இந்தோ-சிதியப் பேரரசர் கோண்டபோரசின் சமகாலத்தவர் ஆவார்.
மதுரா அருகே கங்காளி திலா பகுதியில் மூன்று வரிகள் கொண்ட மன்னர் சோடசாவின் கங்காளி திலா பலகை[9] கல்வெட்டில், மன்னர் சோடசா அமோகினி சிற்பங்களை நிறுவி வழிபட்டது குறித்து உள்ளது. [10]
- மதுரா சிங்கத் தூணில் வடக்கு சத்திரபதி ரஜுவுலா மற்றும் அவரது மகன் சோடசா பற்றி குறித்துள்ளது.
- வாசு நிலைக்கதவுக் கல்வெட்டுகள்
- சோடசாவின் மதுரா கல்வெட்டில், அவர் கஜவரன் என்ற பிராமணருக்கு அளித்த தானத்தை குறித்துள்ளது.[13]
- சோடசாவின் கங்காளி திலா பலகைக் கல்வெட்டில் அவரது ஆட்சிக் காலம் குறித்துள்ளது. ( கல்வெட்டின் இரண்டாம் வரியில் மகா சத்திரபதி சூடாசா எனக்குறித்துள்ளது.[14]
- மலைக்கோயில் கல்வெட்டில் சத்திரபதி சோடசா மற்றும் அவரது தந்தை ரஜுவுலாவின் பெயர்களைக் குறித்துள்ளது.
- மோரா கிணறு கல்வெட்டில் சததிரபதி சோடசா மற்றும் அவரது தந்தை ரஜுவுலாவின் பெயர்களை குறித்துள்ளது.