ஜோயோதி பாசு
From Wikipedia, the free encyclopedia
ஜோயோதி பாசு (பிறப்பு 17 திசம்பர் 1957) இந்திய உயிர்வேதியியலாளர், உயிரணு உயிரியலாளர் மற்றும் போசு நிறுவனத்தில் மூத்த பேராசிரியர். செங்குருதியணுயின் சவ்வு கட்டமைப்பு குறித்த அவரது ஆய்வுகளுக்காக அறியப்படுபவர். இந்தியாவின் மூன்று பெரிய அறிவியல் கழகங்களிலும் (தேசிய அறிவியல் கழகம், இந்தியா, இந்திய அறிவியல் கழகம், இந்திய தேசிய அறிவியல் கழகம்) தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வாளராக (fellow) உள்ளார். இந்திய வேதி உயிரியல் சமூகத்திலும் ஆய்வாளராக உள்ளார். இந்திய அரசின் உயிரிதொழில்நுட்பவியல் துறை இவருக்கு 2002இல் பணிவாழ்வு முன்னேற்றத்திற்கான தேசிய உயிர் அறிவியல் (N-BIOS) விருது வழங்கி உள்ளது. இது இந்திய அறிவியலாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகும்.[1]
விரைவான உண்மைகள் ஜோயோதி பாசு, பிறப்பு ...
ஜோயோதி பாசு | |
---|---|
பிறப்பு | 17 திசம்பர் 1957 (1957-12-17) (அகவை 66) மேற்கு வங்காளம், இந்தியா |
வாழிடம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | |
பணியிடங்கள் | |
கல்வி கற்ற இடங்கள் |
|
ஆய்வு நெறியாளர் |
|
அறியப்படுவது | இடமளிக்கும் பெருவிழுங்கியுடன் பூஞ்சை நுண்ணுயிரியின் இடைவினை குறித்த ஆய்வுகள் |
விருதுகள் |
|
மூடு