டக்கோலா
From Wikipedia, the free encyclopedia
மாரியானோ டி ஜகோபோ டெட்டோ இல் டக்கோலா (Mariano di Jacopo detto il Taccola, 1382 – ஏறத்தாழ. 1453), சுருக்கமாக டக்கோலா ('காகம்'), இத்தாலியில் மறுமலர்ச்சி காலத்தில் வாழ்ந்த ஓர் அரசு நிர்வாகி, கலைஞர் மற்றும் பொறியியலாளர். பல்வேறு புதுமையான பொறிகளையும் கருவிகளையும் விளக்கங்களுடன் வரைபடங்களாக தொகுத்த டெ இஞ்சினிஸ் , டெ மசினிஸ் என்ற அவரது தொழில்நுட்பக் கட்டுரைத்தொகுப்புகளுக்காக அறியப்படுகிறார். பிரான்செஸ்கோ டி ஜியார்ஜியோ, லியொனார்டோ டா வின்சி போன்ற பிற்கால மறுமலர்ச்சி பொறியாளர்களும் கலைஞர்களும் இவரது படைப்புக்களை பரவலாக படித்து வந்ததுடன் தங்கள் படைப்புக்களில் பயன்படுத்தியுமுள்ளனர்.