நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் / From Wikipedia, the free encyclopedia
நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில் (திருநாகைக்காரோணம்) என்பது பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 82வது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. அதிபத்த நாயனார் அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). நாகப்பட்டிணம் அதிபத்த நாயனார் அவதார தலம்.[1]
விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) திருக்கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
தேவாரம் பாடல் பெற்ற திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) திருக்கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 10.7663°N 79.8428°E / 10.7663; 79.8428 |
பெயர் | |
புராண பெயர்(கள்): | காயாரோகணம், ஆதிபுராணம், சிவராசதானி, பார்ப்பதீச்சரம், அரவநகரம் |
பெயர்: | திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | நாகப்பட்டிணம் |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர் |
தாயார்: | நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி |
தல விருட்சம்: | மாமரம் |
தீர்த்தம்: | தேவ தீர்த்தம், புண்டரீக தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கல்வெட்டுகள்: | உண்டு |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
மூடு