![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c0/Narad_-_Vintage_Print.jpg/640px-Narad_-_Vintage_Print.jpg&w=640&q=50)
நாரதர்
From Wikipedia, the free encyclopedia
நாரதர் அல்லது நாரத முனி, வைணவ சமயத்தின் ஒரு உன்னதமான முனிவர் ஆவார். இவரைப் பற்றியச் சிறப்புகள் பாகவதப் புராணம், இராமாயணம், போன்ற புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆகமவிதிகளைப்பற்றி நாரதர் எழுதிய பஞ்சரத்ரா எனும் நூல் வைணவ மூர்த்தங்களுக்கு பூசைசெய்யும் முறைகளை விளக்கியுள்ளது. ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் மத்தியில் இந்நூல் மிகவும் முக்கியமானது, காரணம் அவர்களும் இதே நாரதக் குருப் பரம்பரையில் வந்தவர்கள். நாரதர் எப்பொழுதும் தன்னுடன் ஒரு வீணையும் வைத்திருப்பார். நாராயண என்ற திருமாலின் நாமத்தை எப்போதும் சொல்லும் இவரது பக்திக்கு ஈடு இணை கிடையாது. பக்தி யோகா முறையையும், நாரத பக்தி சூத்திரங்களையும் இவர் இயற்றியுள்ளார். நாரதஷ்ம்ரிதி எனும் தருமசாச்திரத்தையும் இவர் வழங்கியுள்ளார். இதுவே துறவறம் மற்றும் தவத்தின் முறைகளை எடுத்தியம்புகிறது.
விரைவான உண்மைகள் நாரதர், அதிபதி ...
நாரதர் | |
---|---|
![]() நாரத முனிவர் | |
அதிபதி | பிரபஞ்சத்தின் ரிஷி |
தேவநாகரி | नारद |
வகை | விஷ்ணு பக்தர், தேவ ரிஷி |
இடம் | பிரம்மலோகம் மற்றும் விஷ்ணுலோகம் |
மந்திரம் | ஓம் நாரதாய நமஹ |
பெற்றோர்கள் | பிரம்மன் (தந்தை) |
நூல்கள் | நாரத புராணம் |
விழாக்கள் | நாரத ஜெயந்தி |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/Possibly_Narada%2C_the_inventor_of_the_Vina..jpg/640px-Possibly_Narada%2C_the_inventor_of_the_Vina..jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d4/Sage_Sanathkumar_teaching_Narada_muni.jpg/640px-Sage_Sanathkumar_teaching_Narada_muni.jpg)