சனத்குமாரர்
From Wikipedia, the free encyclopedia
இந்து சமயப் புராணங்களில் படைப்புக் கடவுள் பிரம்மா முதன் முதலாக படைத்ததாகச் சொல்லப்படும் நால்வரில் ஒருவர் சனத்குமாரர். மற்ற மூவர் சனகர், சதானந்தர், சனாதனர் என்பவர். இவர்கள் நால்வரையும் படைத்தல் தொழிலில் ஈடுபடச் சொன்னார் பிரம்மா. ஆனால் அவர்கள் தோன்றியவுடனேயே ஆன்மிக அறிவில் சிறந்த நித்திய பிரம்மச்சரிய வாழ்வை மேற்கொண்டனர். பரம்பொருளின் தியானத்தைத் தவிர வேறு எதிலும் அவர்கள் மனம் செல்லவில்லை. புராணங்களில் இவர்கள் மற்றவர்களுக்கு உபதேசித்ததைப் பற்றி நிறையவே உள்ளது. சனத்குமாரர் எழுதியதாக கூறப்படும் சனத்குமார சம்ஹிதை எனும் நூல் பாஞ்ச ராத்திர ஆகமம் வைணவர்களால் போற்றப்படுகிறது.[1]