பாரதிதாசன்
தமிழ் இந்திய எழுத்தாளர் (1891-1964) / From Wikipedia, the free encyclopedia
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், "புரட்சிக் கவிஞர்" என்றும் "பாவேந்தர்" என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
விரைவான உண்மைகள் பாரதிதாசன், பிறப்பு ...
பாரதிதாசன் | |
---|---|
புரட்சிக் கவிஞர், பாவேந்தர் | |
பிறப்பு | சுப்புரத்னம் (1891-04-29)ஏப்ரல் 29, 1891 புதுவை, இந்தியா |
இறப்பு | ஏப்ரல் 21, 1964(1964-04-21) (அகவை 72) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
புனைபெயர் | பாரதிதாசன், பாவேந்தர் |
தொழில் | தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி |
தேசியம் | இந்தியர் |
கல்வி | புலவர் |
கல்வி நிலையம் | கல்வே கல்லூரி, புதுவை |
காலம் | 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் |
வகை | தமிழிலக்கியம் - கவிதை, நாடகம், கட்டுரை, கதை |
கருப்பொருள் | இனமானம், அரசியல் |
இலக்கிய இயக்கம் | திராவிட இயக்கம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பாண்டியன் பரிசு |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது |
துணைவர் | பழநி அம்மையார் |
பிள்ளைகள் | சரசுவதி.கண்ணப்பன் வசந்தா.தண்டபாணி இரமணி.சிவசுப்ரமணியன் மன்னர் மன்னன் |
கையொப்பம் | |
மூடு