புர்கான் கல்துன்
மங்கோலியாவில் உள்ள புனித மலை / From Wikipedia, the free encyclopedia
புர்கான் கல்துன் (சிரில்லிக்: Бурхан Халдун) என்பது கென்டீ மலைத்தொடரில் உள்ள ஒரு மலையாகும். இத்தொடர் வடகிழக்கு மங்கோலியாவின் கென்டீ மாகாணத்தில் அமைந்துள்ளது. இம்மலை அல்லது இதன் இடம் செங்கிஸ் கானின் பிறப்பிடமாக நம்பப்படுகிறது. மேலும் இங்குதான் அவர் புதைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அவரது வெற்றிகரமான தளபதிகளுள் ஒருவரான சுபுதையின் பிறப்பிடமும் இதுதான்.
புர்கான் கல்துன் | |
---|---|
புர்கான் கல்துன் | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 2,450 m (8,040 அடி) |
ஆள்கூறு | 48°45′14″N 108°39′50″E |
புவியியல் | |
அமைவிடம் | மங்கோலியா |
மூலத் தொடர் | கென்டீ மலைகள் |
உலகப் பாரம்பரியக் களம் புர்கான் கல்துன் | |
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
செங்கிஸ் கான் இதனை ஒரு சக்திவாய்ந்த மைல்கல்லாக மாற்றியதற்கு முன்பே இது மதரீதியாக வலுவான முக்கியத்துவத்தை கொண்டிருந்தது. இது செங்கிஸ் கானால் புனிதமானதாக ஆக்கப்பட்டதற்குப் பின் மங்கோலியாவின் மிகவும் புனிதமான மலையாகக் கருதப்படுகிறது. இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களமாக ஜூலை 4, 2015 அன்று "பெரிய புர்கான் கல்துன் மலை மற்றும் அதன் சுற்றியுள்ள புனித நிலப்பகுதி" என்ற தலைப்பில் எழுதப்பட்டது. 1955 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தீர்மானத்தின் கீழ் இந்த மலையின் வழிபாடு முறைப்படுத்தப்பட்டு வருகிறது. இம்மலை ஒரு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. இதன் சுற்றுச்சூழல் மத்திய ஆசிய ஸ்டெப்பியில் உள்ள தாவரங்களின் தனித்துவமான பல்லுயிர்த் தன்மையைக் கொண்டுள்ளது. இதில் 50 வகையான உயிரினங்கள் மற்றும் 253 வகைப் பறவைகள் உள்ளன.