மகாவீரர் ஜெயந்தி
From Wikipedia, the free encyclopedia
மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti), சமண சமயத்தின் 24-வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதாகும்.
விரைவான உண்மைகள் மகாவீரர் ஜெயந்தி, பிற பெயர்(கள்) ...
மகாவீரர் ஜெயந்தி | |
---|---|
மதுரை சமணர் மலையில் மகாவீரரின் சிற்பம் | |
பிற பெயர்(கள்) | மகாவீரர் பிறந்தநாள் விழா |
கடைபிடிப்போர் | சமணர்கள் |
வகை | இந்தியாவின் தேசிய சமய விடுமுறை நாள் |
முக்கியத்துவம் | மகாவீரரின் பிறந்த நாள் |
கொண்டாட்டங்கள் | சமணக் கோயிலுக்குச் சென்று வழிபடுதல் |
அனுசரிப்புகள் | பிரார்த்தனைகள், பூஜைகள், வழிபாடுகள் |
நாள் | சைத்திர மாதம், திரியோதசி |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
மூடு
மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் சைத்திர மாதம், திரியோதசி திதி அன்று மகாவீரரின் பிறந்த நாள், சமணர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. [1]
மகாவீரர் பிறந்த நாளை இந்தியாவில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அன்று இந்தியாவில் இறைச்சிக் கடைகளும், மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் ஆணையிட்டுள்ளது.