மங்கோலியர்களின் இரகசிய வரலாறு
From Wikipedia, the free encyclopedia
மங்கோலியர்களின் இரகசிய வரலாறு [1] என்பது ஒரு மங்கோலிய இலக்கியம் ஆகும். மங்கோலிய மொழியில் மிகப் பழமையான இலக்கியம் இது தான். செங்கிஸ் கானின் இறப்பிற்குச் சில காலம் கழித்து மங்கோலிய அரச குடும்பத்திற்காக எழுதப்பட்டது. எழுதியவர் யார் என்று தெரியவில்லை. உண்மையில் மொங்கோலிய எழுத்துமுறையில் எழுதப்பட்டது. ஆனால் இப்போதுள்ள இலக்கியமானது சீன எழுத்துகளில் எழுதப்பட்டதன் மறு பதிப்பு ஆகும்.
விரைவான உண்மைகள் நூலாசிரியர், நாடு ...
நூலாசிரியர் | தெரியவில்லை |
---|---|
நாடு | மங்கோலியா |
மொழி | நடு மங்கோலியம் |
வகை | வரலாறு/சுயசரிதை |
மூடு
செங்கிஸ் கானைப் பற்றி எழுதப்பட்ட மிக முக்கியமான ஒற்றை இலக்கியமாகக் கருதப்படுகிறது. பாரம்பரியத்திற்கு முந்தைய மற்றும் இடைக்கால மங்கோலிய மொழியைப் பற்றி ஏராளமான தகவல்களைத் தருகிறது.[2] ஒரு செம்மையான இலக்கியமாக மங்கோலியா மற்றும் உலகெங்கிலும் கருதப்படுகிறது.