மதுரா சிங்கத் தூண்
From Wikipedia, the free encyclopedia
மதுரா சிங்கத் தூண் (Mathura lion capital), கிபி முதல் நூற்றாண்டின் துவக்க காலத்தில், பரத கண்டத்தின் மதுரா பகுதிகளை ஆண்ட இந்தோ சிதிய மன்னர்கள் நிறுவிய இந்த மணற்கல் சிங்கத் தூணை, தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா நகரத்தில் 1869ம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. [1] இச்சிங்கத்தூணில் பிராகிருதத்தின் கரோஷ்டி எழுத்துமுறையில் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது.[2] [3]
மதுரா சிங்கத் தூண் | |
செய்பொருள் | செம் மணற்கல் |
---|---|
அளவு | 16.75 அங்குலம் |
உருவாக்கம் | கிபி 1-10 |
கண்டுபிடிப்பு | மதுரா, உத்தரப் பிரதேசம், இந்தியா |
தற்போதைய இடம் | பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன் |
இந்தோ சிதியர்களின் வடக்கு சத்திரபதி மன்னர் முகி என்பவரின் நினைவாக இச்சிங்கத் தூண் நிறுவப்பட்டதாகும். இச்சிங்கத் தூணில் இந்தோ சிதிய மன்னர்களின் வழித்தோன்றல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. [4]
இச்சிங்க தூணில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகள், மகாசம்ஹிகா புத்தப் பிரிவை எதிர்க்கும் சர்வாஸ்திவாத பௌத்தத்தை இந்தோ சிதிய மன்னர்கள் ஆதரித்தாக குறிப்பிடுகிறது. [5]தற்போது இச்சிங்கத் தூண் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.