மலேசியாவில் தொடருந்து மின்மயமாக்கல்
From Wikipedia, the free encyclopedia
மலேசியாவில் தொடருந்து மின்மயமாக்கல் (ஆங்கிலம்: Railway Electrification in Malaysia; மலாய்: Landasan Elektrik di Malaysia) என்பது மலேசிய தொடருந்து போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள அண்மைய காலத்து மின்மயமாக்க மாற்றத்தைக் குறிப்பிடுவதாகும்.
மலேசியாவின் முதல் தொடருந்து சேவை 1885-ஆம் ஆண்டிற்கு முந்தையது என்றாலும், 1995 ஆகத்து 3-ஆம் தேதியில்தான் கேடிஎம் இடிஎஸ் (ETS KTM Electric Train Service) மூலமாக முதல் மின்மயமாக்கப்பட்ட தொடருந்து சேவை செயல்படத் தொடங்கியது.
மலேசியத் தொடருந்து மின்மயமாக்கல் என்பது மலாயா தொடருந்து நிறுவனத்தின் மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டத்தைக் குறிக்கின்றது.
அத்துடன் இந்தத் திட்டத்தின் வழியாக; பாடாங் பெசார் தொடங்கி ஜொகூர் பாரு வரையிலான தொடருந்து வழித்தடங்களில், பாதசாரிகள் பயன்படுத்திய சாலைக் கடவுகள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டன. அவற்றுக்குப் பதிலாக பாதசாரிகள்; மற்றும் இலகு வாகனங்களுக்கான மேம்பாலங்கள் உருவாக்கப்பட்டன.