முதலாம் அமென்கோதேப்
From Wikipedia, the free encyclopedia
முதலாம் அமென்கோதேப் (Amenhotep I)[3] பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1526 - 1506 முடிய 20 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் ஆட்சி செய்தார்[1]
Amenhotep I | |
---|---|
முதலாம் அமென்கோதேப் | |
பார்வோன் முதலாம் அமென்கோதேப்பின் சிற்பம் | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | கிமு 1525–1504 (சர்சைக்குரியது), 20 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் [1], பதினெட்டாம் வம்சம் |
முன்னவர் | முதலாம் அக்மோஸ் |
பின்னவர் | முதலாம் தூத்மோஸ் |
துணைவி(யர்) | அக்மோஸ்-மெரிதமுன் |
பிள்ளைகள் | அமெனம்ஹத் (இளவயது மரணம்) |
தந்தை | முதலாம் அக்மோஸ் |
தாய் | அரசி அக்மோஸ்-நெபர்தாரி |
இறப்பு | கிமு 1506 அல்லது 1504 |
அடக்கம் | மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 39 |
முதலாம் அமென்கோதேப்பின் ஆட்சிக் காலம் குறித்த செய்திகள் குறைவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இவர் நூபியா மற்றும் கீழ் எகிப்தின் நைல் நதி வடிநிலப் பகுதிகளில் மட்டுமே தனது ஆட்சிப் பரப்பை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் மேல் எகிப்தில் இரா, அமூன் போன்ற எகிப்தியக் கடவுள்களுக்கு கோயில்கள் நிறுவினார். மேலும் அடக்கத்திற்கான தனது கல்லறைக் கோயிலை மன்னர்களின் சமவெளியில், கல்லறை எண் 39-இல் நிறுவினார்.[4]
முதலாம் அமென்கோதேப் மட்டுமே தனது கல்லறைக் கோயிலை, பிரமிடுக்கு வெளியே தேர் எல் பகாரியில் கட்டியவர்.[5] முதலாம் அமென்கோப் இறந்த 50 ஆண்டுகள் கழித்து எகிப்திய அரசி ஆட்செப்சுட்டு கல்லறையை கட்டுவதற்காக முதலாம் அமென்கோதோப்பின் கல்லறை பெரும் அளவில் சேதப்படுத்தப்பட்டது.[6] முதலாம் அமென்கோதோப் பெயர் பொறித்த சில செங்கற்கள் மட்டுமே எஞ்சியிருந்தது. [5]மேலும் முதலாம் அமென்கோதேப்பின் கல்லறையில் இருந்த அரச குடும்பத்தினரின் சிலைகள் அருகே அமைந்த இரண்டாம் அமென்கோதேப்பின் கல்லறைக்கு மாற்றப்பட்டது.