வட மாகாணம், இலங்கை
இலங்கையின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
வட மாகாண அரசு பற்றி அறிய வட மாகாண சபை கட்டுரையைப் பார்க்கவும்.
வட மாகாணம் (Northern Province) இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வட கோடியில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு, அதன் மேற்கிலுள்ள தீவுகள் மற்றும் தலை நிலத்தின் ஒரு பகுதியான வன்னி என அழைக்கப்படும் பகுதியும் சேர்ந்து இம்மாகாணத்தை உருவாக்குகின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்கள் இந்த மாகாணத்துள் அடங்கியுள்ளன. வட மாகாணத்தின் தலைநகரம் யாழ்ப்பாணம் ஆகும்.
விரைவான உண்மைகள் வட மாகாணம்Northern Province, நாடு ...
வட மாகாணம் Northern Province | |
---|---|
மாகாணம் | |
இலங்கையில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 09°12′N 80°25′E | |
நாடு | இலங்கை |
அமைப்பு | 1 அக்டோபர் 1833 |
மாகாண சபை | 14 நவம்பர் 1987 |
தலைநகர் | யாழ்ப்பாணம் |
பெரிய நகரம் | யாழ்ப்பாணம் |
மாவட்டங்கள் | |
அரசாங்கம் | |
• வகை | மாகாண சபை |
• அமைப்பு | வட மாகாண சபை |
• ஆளுனர் | பி. எஸ். எம். சார்லசு |
• முதலமைச்சர் | வெற்றிடம் |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 8,884 km2 (3,430 sq mi) |
• நிலம் | 8,290 km2 (3,200 sq mi) |
பரப்பளவில் தர வரிசை | 3வது (மொத்தப் பரப்பில் 13.54%) |
மக்கள்தொகை (2012 கணக்கீடு)[2] | |
• மொத்தம் | 10,58,762 |
• Rank | 9வது (மொத்த தொகையில் 5.22%) |
இனம்(2012 மக்கள்தொகைக் கணக்கீடு)[2] | |
• இலங்கைத் தமிழர் | 987,692 (93.29%) |
• இலங்கைச் சோனகர் | 32,364 (3.06%) |
• சிங்களவர் | 32,331 (3.05%) |
• இந்தியத் தமிழர் | 6,049 (0.57%) |
• ஏனையோர் | 326 (0.03%) |
சமயம்(2012 மக்கள்தொகைக் கணக்கீடு)[3] | |
• இந்து | 789,362 (74.56%) |
• கிறித்தவர் | 204,005 (19.27%) |
• முசுலிம் | 34,040 (3.22%) |
• பௌத்தர் | 30,387 (2.87%) |
• ஏனையோர் | 968 (0.09%) |
நேர வலயம் | இலங்கை (ஒசநே+05:30) |
அஞ்சல் குறியீடுகள் | 40000-45999 |
தொலைபேசிக் குறியீடுகள் | 021, 023, 024 |
ஐஎசுஓ 3166 | LK-4 |
வாகனப் பதிவு | NP |
அதிகாரபூர்வ மொழிகள் | தமிழ், சிங்களம் |
மலர் | காந்தள் |
மரம் | மருது |
பறவை | ஏழு சகோதரிகள் |
மிருகம் | ஆண் மான் |
இணையதளம் | வட மாகாண சபை |
மூடு
இலங்கை மாகாணங்கள் 19ம் நூற்றாண்டு முதலே நடைமுறையில் உள்ளன. ஆனாலும், 1987 ஆம் ஆண்டில் இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் நிறுவப்பட்டதை அடுத்து மாகாணங்கள் சட்டபூர்வ அந்தஸ்தைப் பெற்றன.[4][5] ஈழப் போர் இம்மாகாணத்திலேயே ஆரம்பித்தது. இது இலங்கையின் தமிழ் நாடு எனவும் அழைக்கப்படுகிறது.[6]