ஹூணர்கள்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு / From Wikipedia, the free encyclopedia
ஹூணர்கள் (Hunas) (கி பி 475–576) நடு ஆசியாவைச் சேர்ந்த ஹெப்தலைட்டுகள் எனும் ஆடு, மாடு மற்றும் குதிரைகளை மேய்க்கும் நாடோடி இன மக்கள் ஆவர். இவர்கள் கி பி ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ஆறாம் நூற்றாண்டில் முற்பகுதிக்குள் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்கு நுழைந்து, குப்தப் பேரரசையும், மத்திய இந்தியாவின் சந்தேல குல மன்னர் யசோதர்மன் மீது அடிக்கடி தாக்குதல்கள் தொடுத்து காஷ்மீர் முதல் மாளவம் வரையிலான பகுதிகளை கி பி 475 முதல் 576 முடிய ஆண்டனர்.[1][2]
வெள்ளை ஹூண மன்னர்களில் புகழ் பெற்றவர்கள் அட்டிலா, தோரமணன் மற்றும் மிகிரகுலனும் ஆவர்.