1910கள்
பத்தாண்டு / From Wikipedia, the free encyclopedia
1910கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1910ஆம் ஆண்டு துவங்கி 1919-இல் முடிவடைந்தது.
விரைவான உண்மைகள்
மூடு
1910களில் ஐரோப்பிய நாடுகள் தமது இராணுவத்தை மேலும் பலமாக்குவதில் பெருமளவில் ஈடுபட்டன. ஜூன் 28, 1914இல் ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் ஃபேர்டினன்ட் சேர்பியாவில் கொல்லப்பட்டமை மற்றும் முதலாம் உலகப் போர் ஐரோப்பாவில் தொடங்கியதும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். இது பின்னர் உலகின் ஏனைய நாடுகளுக்கும் பரவியது. நவம்பர் 1918இல் போர் முடிவடைந்தது. உலகப் போர் காரணமாகப் பழைய முடியாட்சிகள் பல முடிவுக்கு வந்தன. ரஷ்யாவின் சார் மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் கொடூரமான முறையில் ரஷ்யப் புரட்சியாளர்களினால் கொல்லப்பட்டு ரஷ்யா கம்யூனிச நாடாகியது.[1][2][3]