From Wikipedia, the free encyclopedia
2017 குருத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்புக்கள் என்பன, குருத்து ஞாயிறு தினமான 09 ஏப்ரல் 2017 அன்று இடம்பெற்ற இரட்டைத் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் ஆகும்.[3] இத்தாக்குதல்கள் வட எகிப்திய நகரான டன்டாவில் அமைந்துள்ள புனித சோர்சுத் தேவாலயத்திலும், அலெக்சாந்திரியாவின் முக்கிய தேவாலயமான புனித மார்க்ஸ் பேராலயத்திலும் இடம்பெற்றன. இத்தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.[2][4][5] கோப்டிக் கிறுத்துவர்களின் தேவாலயத்தில் நடந்த இத்தாக்குதலில் அலெக்சாந்திரியாவில் 17 பேரும் டன்டாவில் 28 பேரும் ஆக மொத்தம் 45 பேர் கொல்லப்பட்டனர்.[6] இதைத்தொடர்ந்து எகிப்தில் மூன்று மாதக்காலத்திற்கு அவசர நிலையை அதிபர் அப்துல் ஃபடா அல் சிசி அறிவித்துள்ளார். இதன்படி பிடியாணையின்றி அதிகாரிகளால் வீடுகளை சோதனை செய்து கைது செய்ய முடியும்.
2017 குருத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்புக்கள் | |
---|---|
இடம் | டன்டாவும் அலெக்சாந்திரியாவும், எகிப்து |
ஆள்கூறுகள் | 30.108059°N 31.339645°E (Tanta), 31.198290°N 29.899403°E (Alexandria) |
நாள் | 9 ஏப்ரல் 2017, குருத்து ஞாயிறு |
தாக்குதலுக்கு உள்ளானோர் | கொப்டிக் கிறித்தவர்கள் |
தாக்குதல் வகை | தற்கொலைத் தாக்குதல் |
ஆயுதம் | வெடிக்கும் உடல் அங்கிகள் |
இறப்பு(கள்) | டன்டா: 27 அலெக்சாந்திரியா: 17 மொத்தம்: 44[1] |
காயமடைந்தோர் | டன்டா: 78 அலெக்சாந்திரியா: 48 மொத்தம்: 126[1] |
சந்தேக நபர் | ஐஎஸ்ஐஎஸ் – சீனாய் மாகாணம் (உரிமை கோரப்பட்டது)[2] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.