2020–2021 இந்தியா–சீனா மோதல்கள்
From Wikipedia, the free encyclopedia
2020–2021 இந்தியா–சீனா மோதல்கள் (2020–2021 China–India skirmishes) இந்தியாவின் வடக்கில் உள்ள லடாக் பிரதேசத்தில், இந்திய-சீன எல்லைகளைப் பிரிக்கும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே அமைந்த இந்தியாவின் கல்வான பள்ளத்தாக்கில் இந்திய-சீனப் படைகளுக்கும் இடையே 5 மே 2020 முதல் நடந்து கொண்டிருக்கும் இந்திய-சீன எல்லைப் பிணக்குகளின் ஒரு பகுதியாகும்.
இந்தியா–சீனா மோதல்கள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இந்திய-சீன எல்லைப் பிணக்குகள் பகுதி | |||||||
காஷ்மீரின் சிஐஏ வரைபடம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இந்தியா | சீனா | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே (இந்திய இராணுவத் தலைவர்) லெப்டினன்ட் ஜெனரல் யோகேஷ் குமார் ஜோஷி (வடக்கு கட்டளை பிரிவு) லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், (14-படைப் பிரிவுத் தலைவர்) [1] மேஜர் ஜெனரல் அபிஜித் பப்பத் (கட்டளை அதிகாரி, (தரைப்படையின் 3-வது பிரிவு)[2] கர்ணல் விஜய் ராணே (மோதலில் காயமடைந்தவர்]])[3] (கட்டளை அதிகாரி, 11-வது மகர் ரெஜிமென்ட் ) கர்ணல் சந்தோஷ் பாபு (மோதலில் கொல்லப்பட்டவர்)[4] (கட்டளை அதிகார், 16-வது பிரிவு, பிகார் ரெஜிமெண்ட்) | ஜெனரல் ஹான் வேய்குயோ கட்டளை அதிகாரி, (மக்கள் விடுதலை இராணுவம்) லெப்டினன்ட் ஜெனரல் சாங் சூலின் (மேற்கு பிரிவின் கட்டளை அதிகாரி)[5] மேஜர் ஜெனரல் லியூ லின் (கட்டளை அதிகாரி, தெற்கு சிஞ்சியாங்[1] |
||||||
படைப் பிரிவுகள் | |||||||
இந்தியப் பாதுகாப்புப் படைகள் | சீன ஆயுதப் படைகள் | ||||||
இழப்புகள் | |||||||
இந்தியத் தரப்பில்: | இந்திய ஆதாரங்கள்: 43 பேர் கொல்லப்பட்டனர் (15 சூன்)[7] காயம் 7 (10 மே)[8] |
இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்கில் முன்னேறிய சீனப்படையிரை தடுத்து நிறுத்த வேன்டி, இந்தியப் படைகள் சூன் 15 மாலை முதல் 16 அதிகாலை வரை சீனப்படையினருடன் கைகலப்பில் ஈடுப்பட்டனர். 1996-இல் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடுக்கு 2 கிலோமீட்டருக்கு அருகில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுகளை வீசக்கூடாது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருந்தது. எனவே இக்கைகலப்பு முற்றி, இருதரப்பும் கற்கள், தடிகள், இரும்பிக் கம்பிகளைக் கொண்டு தாக்கிக் கொண்டனர். சூன் 15 -16 நாட்களில் நடைபெற்ற இந்த மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு இராணுவ அதிகாரி உள்ளிட்ட 20 வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு அறிக்கை வெளியிட்டது.[12] சீனத்தரப்பில் குறைந்தது ஒரு இராணுவ அதிகார் உள்ளிட்ட 43 வீரர்கள் படுகாயமடைந்திருக்கவோ அல்லது கொல்லப்பட்டிருக்க வேன்டும் என செய்திகள் வருகிறது.[7][13] மோதலின் போது சீனர்கள் பிடித்து வைத்திருந்த 10 இந்திய வீரர்கள் மற்றும் 4 அதிகாரிகளை 17 சூன் 2020 அன்று விடுவித்தனர்.