அண்ணமார் சாமி கதை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அண்ணமார் சாமி கதை அல்லது அண்ணமார் கதை அல்லது குன்றுடையான் கதை என்பது கொங்கு நாட்டில் வழங்கிய ஒரு நாட்டு கூத்து ஆகும். இக்கதையின் கதையியல், விரிவு, அழகியல் போன்ற அம்சங்களை கருதி இக்கதையை மகாபாரதம், இராமாயணம் போன்ற காப்பியங்களுடன் ஒப்பிடலாம் என்று இக்கதையை நுணுக்கமாக ஆய்ந்த பிரெண்டா பெக் என்ற தமிழியல் ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். மேலும் "கதையின் கருப்பொருளை ஆய்வு செய்வதன் மூலம் எதிர்ப்பு/எதிர் அழகியல் (oppositional asthetic) எனும் கருத்தாக்கதைக் காட்டுவதாக முன்வைக்கின்றார்". [1]
இக்கதை இன்று வழக்கொழிந்து வரும் நிலையில் இவரின் "அண்ணமார் கதை" நூலும், இயங்குபடமும் முக்கிய ஆவணங்களாகத் திகழ்கின்றன. இக்கதை உடுக்கையடி பாடலாகவும், வேடம் தரித்து நடித்தும் பாடப்படுகிறது. கிராமப்புறங்களில் இன்றும் இக்கதை கூத்து வடிவில் நிகழ்த்தப்படுகிறது.
Remove ads
பதிப்பு வரலாறு
நாட்டார் காப்பியமான அண்ணமார் சாமி கதையை 1971 இல் கவிஞர் சக்திக்கனல், நூலாகப் பதிப்பித்தார். அவருக்கு முன்பே அமெரிக்க ஆய்வாளர் பிரெண்டா பெக் தாராபுரத்தை அடுத்த ஓலப்பாளையம் என்னும் சிற்றூரில் தங்கி இக்கதையின் வாய்மொழி வடிவை சேகரித்திருந்தார். அதன் உரைநடை வடிவம் 1992 இல் வெளியானது. சக்திக்கனல் ஏட்டுச் சுவடியில் இருந்து அண்ணமார் சாமி கதையை பதிப்பித்திருந்தாலும், அதில் இடைச்சொருகலைச் செய்துள்ளார் என்று பிரெண்டா பெக் குற்றம் சாட்டினார்.[2]
Remove ads
கதை மாந்தர்
- குன்றுடையான் (பேச்சு வழக்கில் குன்னுடையான்)
- தாமரை (குன்றுடையான் மனைவி)
- பொன்னர் (பெரியண்ணன் - குன்றுடையான் மகன்)
- சங்கர் (சின்னண்ணன்- குன்றுடையான் மகன்)
- அருக்காணித் தங்கம் (அ) தங்காயி (குன்றுடையான் மகள்)
- செல்லாத்தாக் (குன்றுடையான் பங்காளி)
- தலையூர் காளி
- மாயவன்
- சாம்புவன்
துணை நூல்கள்
- Brenda E. Beck. 1982. The three twins: The telling of a South Indian folk epic. Bloomington, IN: Indiana University Press. ISBN: 0253360145.
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads